Published : 25 Jul 2025 05:34 AM
Last Updated : 25 Jul 2025 05:34 AM

வாரிசு ஆட்சிக்கு முடிவுகட்ட அதிமுகவை ஆதரிக்க வேண்டும்: பிரச்சாரத்தில் பழனிசாமி வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டையில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.

புதுக்கோட்டை: தமிழகத்​தில் வாரிசு ஆட்​சிக்கு முடிவு​கட்ட அதி​முகவை பொது​மக்​கள் ஆதரிக்க வேண்​டும் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரத்தை மேற்​கொண்டு வரும் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனிசாமி, புதுக்​கோட்டை மாவட்​டம் கந்​தர்​வக்​கோட்​டை​யில் நேற்று பொது​மக்​களிடையே பேசி​ய​தாவது: விவ​சா​யிகள் நலனுக்காக கடந்த அதி​முக ஆட்​சி​யில் ரூ.14,400 கோடி​யில் காவிரி- குண்​டாறு இணைப்​புத் திட்​டத்தை கொண்​டு​வந்​தோம்.

ஆனால், அரசி​யல் காழ்ப்​புணர்ச்​சி​யால் இத்​திட்​டத்தை திமுக அரசு முடக்​கி​யுள்​ளது. அதி​முக மீண்டும் ஆட்​சிக்கு வந்​ததும் இத்திட்டம் நிறைவேற்​றப்​படும். அதே​போல, புதுக்​கோட்டை மாவட்​டத்​தில் 2,306 கிராம மக்​கள் பயன்பெறும் வகை​யில், ரூ.574 கோடி​யில் கொண்​டு​வரப்​பட்ட கூட்​டுக் குடிநீர் திட்​டத்​தை​யும் திமுக சரிவர செயல்​படுத்​த​வில்​லை.

நான் செல்​லும் இடங்​களில் எல்​லாம் திரளும் மக்​கள் கூட்​டத்​தைப் பார்த்த பிறகும், முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் அமைச்​சர்​கள், திமுக​வினருக்கு மீண்​டும் ஆட்​சிக்கு வரமுடி​யும் என்ற நினைப்பு வரு​மா? 100 நாள் வேலைத் திட்​டத்தை 150 நாளாக உயர்த்​து​வது, காஸ் சிலிண்​டர் மானி​யம், கல்விக் கடன் தள்​ளு​படி என பல்​வேறு வாக்​குறு​தி​களை திமுக நிறைவேற்​ற​வில்​லை.

அதி​முக ஆட்​சிக்கு வந்​ததும், கந்​தர்​வக்​கோட்​டை​யில் முந்​திரிக் கொட்​டைகளை உடைப்​ப​தற்கு அரசு மானி​யத்​தில் நவீன கருவிகள் வழங்​கப்​படும். வேங்​கைவயலில் குடிநீர் தொட்​டி​யில் மனிதக்​கழிவு கலக்​கப்​பட்ட சம்​பவத்​தில் இது​வரை குற்​ற​வாளிகளைக் கண்​டு​பிடிக்​க​வில்​லை.

அதி​முக-​பாஜக கூட்​டணி உடன்​பாடு ஏற்​பட்​டதுமே திமுக தலை​வர் ஸ்டா​லினுக்கு பயம் வந்​து​விட்​டது. அதனால்​தான் இக்​கூட்டணியை மதவாதக் கூட்​டணி என்று விமர்​சிக்​கிறார்​கள். பாஜகவோடு திமுக ஏற்​கெனவே கூட்​டணி வைத்​த​போது அது தெரிய​வில்​லை​யா? வரும் 2026 தேர்​தலில் அதி​முக தனிப்​பெரும்​பான்​மை​யுடன் ஆட்சி அமைக்​கும்.

உங்​களு​டன் ஸ்டா​லின் திட்​டத்​தில் 48 வகை​யான பிரச்​சினை​களை தீர்த்து வைக்​கப்​போவ​தாக கூறுகிறார்​கள். கடந்த 4 ஆண்டுகளாக இந்​தப் பிரச்​சினை​கள் உங்​களுக்​குத் தெரிய​வில்​லை​யா? குடும்ப ஆட்​சி, வாரிசு ஆட்​சிக்கு முற்​றுப்​புள்ளிவைக்கவும், விலை​வாசி குறைய​வும், மக்​கள் நிம்​ம​தி​யாக வாழ​வும் அதி​முகவை பொது​மக்​கள் ஆதரிக்க வேண்​டும். இவ்வாறு அவர் பேசி​னார். தொடர்​ந்​து, ஆலங்​குடி, அறந்​​தாங்​கி​யில் பழனி​சாமி பிரச்​​சா​ரம் மேற்​கொண்​​டார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x