Published : 23 Jul 2025 05:32 AM
Last Updated : 23 Jul 2025 05:32 AM

தமிழகம் முழுவதும் 100 நாட்களுக்கு அன்புமணி சுற்றுப்பயணம்

சென்னை: தமிழகம் முழு​வதும் 100 நாட்​களுக்கு தமிழக மக்​கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலை​வர் அன்​புமணி சுற்​றுப்​பயணம் மேற்​கொள்கிறார். வரும் 25-ம் தேதி திருப்​போரூரில் இருந்து தொடங்​கு​கிறார்.

இதுதொடர்​பாக நேற்று பாமக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட அறிக்​கை: தமிழகத்​தில் நடை​பெற்று வரும் மக்​கள்​விரோத, சமூகநீ​திக்கு எதி​ரான முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மையி​லான திமுக அரசை அகற்ற வேண்​டும்.

இந்​திய அரசி​யலமைப்பு சட்​டத்​தால் குடிமக்​களுக்கு வழங்​கப்​பட்​டுள்ள 10 வகை​யான உரிமை​களை மீட்​டெடுக்​கும் நோக்​குடன் பாமக தலை​வர் அன்​புமணி வரும் 25-ம் தேதி திருப்​போரூரில் தொடங்கி தமிழகம் முழு​வதும் 100 நாள்​களுக்கு தமிழக மக்​கள் உரிமை மீட்பு பயணத்தை மேற்​கொள்ள முடிவு செய்​திருக்​கிறார்.

சமூக நீதிக்​கான உரிமை, வன்​முறை​யில்லா வாழ்​வுக்​கான மகளிர் உரிமை, வேலைக்​கான உரிமை, விவ​சா​யம் மற்​றும் உணவுக்கான உரிமை, ஆரோக்​கிய​மான சுற்​றுச்​சூழலுக்​கான உரிமை உட்பட 10 அம்​சங்​களை முன்​வைத்து இந்த பயணம் மேற்​கொள்​ளப்​பட​வுள்​ளது.

பசுமைத் தாயகம் நாளாக கொண்​டாடப்​படும் பாமக நிறு​வனர் ராம​தாஸ் பிறந்​த​நாளான ஜூலை 25-ம் தேதி திருப்​போரூரில் தொடங்கி முக்​கிய தொகு​தி​கள் வழி​யாக தமிழ்​நாடு நாளான நவ.1-ம் தேதி தரு​மபுரி​யில் சுற்​றுப்​பயணம் நிறைவடைய​வுள்​ளது.

இதன்​படி ஜூலை 25 - திருப்​போரூர் (தொடக்க விழா), ஜூலை 26 - செங்​கல்​பட்​டு, உத்​திரமேரூர், ஜூலை 27- காஞ்​சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஜூலை 28- அம்​பத்​தூர், மதுரவாயல், ஜூலை 31 - கும்​மிடிப்​பூண்​டி, ஆக.1- திரு​வள்​ளூர், திருத்​தணி, ஆக.2- சோளிங்கர், ராணிப்​பேட்​டை, ஆக.3- ஆற்​காடு, வேலூர், ஆக.4- வாணி​யம்​பாடி, திருப்​பத்​தூர். அடுத்​தகட்ட பயண விவரம் பின்​னர் அறிவிக்​கப்​படும். இவ்​வாறு தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x