Published : 22 Jul 2025 05:50 AM
Last Updated : 22 Jul 2025 05:50 AM

மழையால் விழுந்த மரத்தை அகற்றாததால் இ-சேவை மையத்துக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி

புரசைவாக்கம் தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்படும் இ-சேவை மையம் முன்பு விழுந்த மரத்தை வருவாய்த்துறை அகற்றாத நிலையில், அம்மையத்தில் பல்வேறு சான்றுகளுக்காக விண்ணப்பிக்க, சாகசம் புரிவது போன்று சிரமத்துடன் செல்லும் மக்கள். | படம்: ச.கார்த்திகேயன் |

சென்னை: புரசை​வாக்​கம் தாலுகா அலு​வல​கத்​தில் உள்ள இ-சேவை மையம் முன்பு விழுந்த மரத்தை வரு​வாய்த்​ துறை​யினர் அகற்​றாத​தால் பொது​மக்​கள் அவதிக்​குள்​ளா​யினர். சென்னை புரசை​வாக்​கம் தாலுகா அலு​வலக வளாகத்​தில் 2 அலகு​கள் கொண்ட இ-சேவை மையம் மற்​றும் ஒரு ஆதார் மையம் செயல்​பட்டு வரு​கிறது.

இந்த மையத்​துக்கு தின​மும் 150-க்​கும் மேற்​பட்​டோர் வந்​து, ஆதார் தொடர்​பான சேவை​கள் மற்​றும் வரு​வாய்த்​துறை, சமூக நலத்துறை சார்ந்த சான்​றுகளை பெற விண்​ணப்​பித்து வரு​கின்​றனர். சென்​னை​யில் கடந்த ஒரு வார​மாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலை​யில், இ-சேவை மையம் முன்பு இருந்த மரம், நேற்று முன்​தினம் வேரோடு சாய்ந்து விழுந்​தது.

இந்த மையத்​தின் பணி​யாளர்​கள் நேற்று கடும் சிரமத்​துக்​கிடையே மையத்​துக்​குள் நுழைந்​துள்​ளனர். அதன் பின்​னர் காலை 10 மணிக்​குமேல் பொது​மக்​கள் அதிக அளவில் வரத் தொடங்​கினர். ஒவ்​வொரு​வரும் ஆபத்​தான நிலை​யில், மரத்​தின் மீது ஏறி, இறங்கி கால் நடுங்​கியபடி இ-சேவை மையத்​துக்​குள் செல்ல நேர்ந்​தது. வயதானவர்​கள், மையத்​துக்​குள் செல்ல முடி​யாமல் திரும்பிச் சென்​றனர்.

இது தொடர்​பாக இ-சேவை மைய பணி​யாளர்​களிடம் கேட்​ட​போது, “வரு​வாய்த்​துறை அதி​காரி​களிடம் தகவல் தெரி​வித்து விட்டோம்” என்​றனர். இ சேவை மையத்​துக்​குள் செல்ல முடி​யாமல் திரும்​பிச் சென்ற பொது​மக்​கள் கூறிய​தாவது: ஆண்​டு​தோறும் பேரிட​ரால் பாதிக்​கும் மாநகர​மாக சென்னை உள்​ளது. அதி​காரி​களும், அமைச்​சர்​களும், மேயரும் பேட்டி கொடுக்​கும்​போது, “489 ஹைட்​ராலிக், டெலஸ்​கோபிக் மர அறுவை இயந்​திரங்​கள், 19 ஆயிரம் பணி​யாளர்​கள் தயா​ராக உள்​ளனர்” என கூறுகின்​றனர்.

ஆனால், இங்கு ஒரு மரம் விழுந்​துள்​ளது. வரு​வாய்த்​துறை​யிடம் களப் பணி​யாளர்​கள், இயந்​திரங்​கள், வாகன வசதி இல்லை என்பது உண்​மை​தான். ஆனால், அவர்​கள் மாநக​ராட்​சி​யிடம் உதவி கேட்​டார்​களா, மாநக​ராட்சி நேரத்​தோடு உதவ மறுத்​ததா என்பது தெரிய​வில்​லை. இந்த சிற்​றிடரைக்​கூட எதிர்​கொள்ள முடி​யாத வரு​வாய்த்​துறை, பேரிடரை எப்​படி எதிர்​கொள்​ளும் என்​பதை நினைத்​தாலே, சென்​னை​யில் வசிக்க அச்​ச​மாக உள்​ளது.

இ-சேவை மையத்​துக்​குள் செல்​வது என்​னவோ சாகசம் புரிவது போன்று உள்​ளது. இவ்​வாறு அவர்​கள் கூறினர். இது தொடர்​பாக சென்னை மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே​விடம் விவரம் பெற பலமுறை கைபேசி வழி​யாக தொடர்​பு​கொண்​டும், அவரிடம்​ விவரம்​ பெற முடிய​வில்​லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x