Published : 21 Jul 2025 03:48 PM
Last Updated : 21 Jul 2025 03:48 PM
சென்னை: கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கிக் கடனுதவி வழங்கி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார தேவையை கருத்தில் கொண்டு, அவற்றின் செயல்பாடுகளுக்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த 2021- 22-ம் நிதியாண்டில் 4.08 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.21,392 கோடியும், 2022 - 23-ம் நிதியாண்டில் 4.49 லட்சம் குழுக்களுக்கு ரூ.25,642 கோடியும், 2023 - 24-ம் நிதியாண்டில் 4.79 லட்சம் குழுக்களுக்கு ரூ.30,074 கோடியும் வங்கிக் கடனுதவிகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து கடந்த 2024 - 25-ம் நிதியாண்டில் 4.84 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,189 கோடி கடன் வழங்கி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை படைத்தது.
இதன் தொடர்ச்சியாக 2025 - 26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், சுய உதவிக்குழு மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி நடப்பாண்டில் கடந்த ஜூலை 18-ம் தேதி வரை 1.04 லட்சம் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 13.58 லட்சம் மகளிருக்கு ரூ.9,113 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் மொத்தமாக 19.26 லட்சம் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 2.50 கோடி மகளிருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT