Published : 21 Jul 2025 05:37 AM
Last Updated : 21 Jul 2025 05:37 AM

மார்க்சிஸ்ட் கட்சி இல்லாமல் மதச்சார்பின்மை காக்க முடியுமா? - ராகுல் காந்திக்கு சண்முகம் கண்டனம்

சென்னை: ​மார்க்​சிஸ்ட் கட்சி இல்​லாமல் மதச்​சார்​பின்​மையை பாது​காக்க முடி​யு​மா என ஆர்​எஸ்​எஸ் உடன் இணைத்து விமர்​சனம் செய்த ராகுல் காந்​திக்​கு, மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

கேரளா​வில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல்​காந்​தி, “ஆர்​எஸ்​எஸ் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகளை எதிர்த்து சித்​தாந்த ரீதியாக களத்​தி​லும், கருத்​துகளி​லும் போராடி வரு​கிறது. அவர்​கள் தங்​களது சித்​தாந்​தங்​களை பற்றி தான் நினைக்​கின்​றனர். அவர்களிடம் மக்​கள் மீதான உணர்வு இல்​லை.

அரசி​யலில் இருந்​தால் மக்​கள் என்ன நினைக்​கிறார்​கள் என்​பதை உணருங்​கள்” என்று விமர்​சித்​திருந்​தார். ஆர்​எஸ்​எஸ் உடன் மார்க்சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சியை விமர்​சனம் செய்​ததற்கு மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் கண்டனம் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட சமூக வலைதள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: மதவெறி பாஜக மற்றும் ஆர்​எஸ்​எஸ் அமைப்​புக்கு எதி​ராக மதசார்​பற்ற கட்​சிகளை ஒருங்​கிணைக்க வேண்​டிய மிகப்​பெரிய பொறுப்பு காங்​கிரஸ் கட்​சிக்கு உள்​ளது.

ஆனால் அக்​கட்​சி​யின் மூத்த தலை​வர் ராகுல்​காந்​தி, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யை​யும், ஆர்​எஸ்​எஸ்​யும் சித்​தாந்த ரீதி​யாக சம அளவில் எதிர்த்து போராடு​கிறேன் என்று பேசி​யிருப்​பது அவரது முதிர்ச்​சி​யற்ற தன்​மையை வெளிப்​படுத்​துகிறது. மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்​லாமல் மதசார்​பின்​மையை பாது​காக்க முடி​யு​மா? இவ்​வாறு பதி​விட்​டுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x