Published : 21 Jul 2025 05:12 AM
Last Updated : 21 Jul 2025 05:12 AM

பழனிசாமியின் சுற்றுப்பயணத்தை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை திட்டவட்டம்

சென்னை: அ​தி​முக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி​யின் சுற்​றுப்​பயணத்தை மக்​கள் ஏற்​க​மாட்​டார்​கள் என தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை: தமிழக முதல்​வ​ராக இருந்த ஜெயலலிதா மறை​யும் வரை நீட், உதய் மின்​திட்​டம் உள்ளிட்ட மக்​கள் விரோத திட்​டங்​களை நிறைவேற்ற மறுத்​தார். ஆனால் பழனி​சாமி நீட் தேர்வை 2017-ல் நடை​முறைக்கு கொண்​டு​வந்​தார்.

2011-ல் அதி​முக ஆட்சி அமைந்​த​போது, திமுக வைத்த கடன் ரூ.1 லட்​சம் கோடி. ஆனால் 2021-ல் அதி​முக விட்​டுச்​சென்ற கடன் ரூ.5.7 லட்​சம் கோடி. 11 ஆண்​டு​களில் ரூ.130 லட்​சம் கோடிக்கு பாஜக அரசு கடன் வைத்​திருக்​கிறது.

தமிழகத்​தின் கடன் சுமையை பற்றி பேசும் பழனி​சாமி, மத்​திய பாஜக அரசின் கடன் சுமையை பற்றி பேச துணிவு இருக்​கிற​தா? சிறு​பான்​மை​யினருக்கு எதி​ரான சட்​டங்​களுக்கு ஆதர​வு, மும்​மொழி கொள்கை திணிப்​பு, கல்​வித்​துறைக்கு நிதி மறுப்​பு, மக்களவை எண்​ணிக்கை குறைக்​கும் முயற்சி போன்​றவற்றை எதிர்க்​காமல் அடிமை கட்​சி​யாக அதி​முக
உள்​ளது.

மீண்​டும் பாஜக கூட்​ட​ணி​யில் சேர​வேண்​டிய நிர்​பந்​தம் ஏன் ஏற்​பட்​டது என்பதை பழனி​சாமி விளக்​க​வில்​லை. பழனி​சாமி உள்​ளிட்ட முன்​னாள் அமைச்​சர்​கள் ஊழல் குற்​றச்​சாட்​டு​களில் சிக்கி அமலாக்​கத் துறை, வரு​மானவரித் துறை​யின் பிடி​யில் இருக்​கும்​வரை அமித் ஷாவின் பிடி​யில் இருந்து அதி​முக மீள முடி​யாது. எனவே பழனி​சாமி சுற்​றுப்​பயணங்​களில் நீலிக்​கண்​ணீர் வடிப்​பதை எவரும் ஏற்க மாட்​டார்​கள். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x