Last Updated : 20 Jul, 2025 09:28 AM

4  

Published : 20 Jul 2025 09:28 AM
Last Updated : 20 Jul 2025 09:28 AM

‘கவனிப்பு’ பிரச்சினையால் களேபரமான திருப்பத்தூர் நகர்மன்றம்! - திமுக சேர்மனுக்கு திருகுவலியை உண்டாக்கும் திமுக கவுன்சிலர்கள்

“கவுன்சில் கூட்டத்தைக் கூட்டுங்க... கூட்டாமப் போங்க. அதப் பத்தி எங்களுக்குக் கவலை இல்லை. எங்களுக்குச் கொடுக்க வேண்டியதைக் குடுத்துட்டு அப்புறமா கூட்டத்தை கூட்டுங்க. ஆனா, எங்களுக்கு எதுவும் குடுக்காமலேயே மீதி இருக்கிற ஒன்னரை வருசத்தையும் ஓட்டிடலாம்ன்னு மட்டும் கனவு காணாதீங்க. எல்லா கணக்கும் எங்கக்கிட்ட இருக்கு; எங்கள ஏமாத்த முடியாது” திருப்பத்தூர் நகராட்சி திமுக கவுன்சிலர்கள் தான் இப்படி தங்கள் கட்சி சேர்மனுக்கு எதிராகவே ‘கட்டிங்’ பிரச்சினையை எழுப்பி நகர்மன்றக் கூட்டத்தை ஒத்திவைக்க வைத்திருக்கிறார்கள்.

36 வார்​டு​களைக் கொண்ட திருப்​பத்​தூர் நகராட்​சி​யில் திமுக கவுன்​சிலர்கள் சேர்​மனுடன் சேர்த்து 29 பேர் உள்ளனர். அதிமுக-வுக்கு 5 கவுன்​சிலர்​களும் காங்​கிரஸ், பாமக-வுக்கு தலா ஒரு கவுன்​சிலரும் இருக்​கிறார்​கள். நகர்​மன்றத் தலைவராக சங்கீதா வெங்​கடேஷ் இருக்​கிறார். தொடக்​கத்​தில் இருந்தே திமுக கவுன்​சிலர்​களால் சங்கீ​தாவுக்கு தலைவலி​தான். எந்தப் பணியைத் தொட்​டாலும் அதில் ‘தங்​களுக்​கானது’ தட்டாமல் வரவேண்​டும் என திமுக கவுன்​சிலர்கள் சிலர் கறாராக இருப்​ப​தாகச் சொல்​கிறார்​கள்.

இதைப் பார்த்து​விட்டு, நம்ம பங்கென்ன சொத்தைப் பங்கா என மற்ற கட்சிகளின் கவுன்​சிலர்கள் சிலரும், “எங்​களை​யும் கொஞ்சம் ‘கண்​டுக்​கங்க’ “என ‘இன்கம்மிங் குரல்’ எழுப்​பி​னார்​கள். இவர்​களின் வாயடைக்க ஆரம்பத்​தில் கொஞ்சம் ‘கொடுத்​துப் பழகிய’ சேர்​மன், ஒரு கட்டத்​தில் எதிர்​பார்ப்புகள் அதிக​மான​தால், “அதெல்​லாம் முடி​யாது” என கைவிரித்​திருக்​கிறார். இதனால், மாதா மாதம் நடத்​தப்​பட்டு வந்த நகர்​மன்றக் கூட்​ட​மானது 3 அல்லது 5 மாதத்​துக்கு ஒரு முறை என தள்ளிப் போனது.

இந்தச் சூழலில், நகராட்சி அலுவல​கத்​துக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.5 கோடியை தமிழக அரசு அண்மை​யில் ஒதுக்​கியது. இதற்கான டெண்டர் தொடர்பாக கடந்த 2 மாதங்​களுக்கு முன்பு நகர்​மன்றக் கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டு வொர்க் ஆர்டர் போடப்​பட்​டது. இந்த நிலை​யில், கடந்த 9-ம் தேதி, நகர்​மன்ற சாதா​ரணக் கூட்டம் நடைபெறும் என கவுன்​சிலர்​களுக்கு அஜெண்டா அனுப்​பப்​பட்​டது. இதையடுத்து, 9-ம் தேதி ஆக்ரோஷமாக கிளம்பி வந்த ஆளும் கட்சி கவுன்​சிலர்கள் உள்ளிட்ட சிலர், கூட்​டரங்​கிற்கு வராமல் சேர்மன் அறைக்​குச் சென்று அறையைச் சாத்​திக் கொண்டு சேர்​மனுடன் பேச்சு​வார்த்தை​யில் ஈடுபட்​டனர்

அவர்​களிடம், “ஏற்​கெனவே முந்தைய டெண்​டர்​களில் உங்களுக்​கானதை எல்லாம் செய்​து​விட்​டோம். இந்த டெண்டர் தொடர்பாக உள்ளூர் கட்சிப் பொறுப்​பாளர்கள் தொடங்கி மேல் மட்டம் வரைக்​கும் கவனிக்க வேண்​டி​யுள்​ளது. சமீபத்​தில் சிஎம் விசிட் வந்தப்ப 25 லட்சம் வரைக்​கும் நான் செலவு செய்திருக்​கிறேன். இதையெல்​லாம் நான் யாரிடம் போய்க் கேட்​பது? இப்போது நீங்​களும் வந்து பெரிய தொகையை கேட்​டால் நான் என்ன செய்​வது? அதுவுமில்​லாமல் இந்த டெண்டரை எடுத்​திருப்​பவர் அமைச்சர் எ.வ.வேலு​வால் பரிந்துரை செய்​யப்​பட்​ட​வர். அப்படி இருக்கை​யில், என்னால் எப்படி நீங்கள் கேட்பதைச் செய்ய முடி​யும்?” என தனது இயலாமையை வெளிப்​படுத்தி இருக்​கிறார் சேர்மன் சங்கீதா வெங்​கடேஷ்.

சங்கீதா வெங்​கடேஷ்

ஆனால், இதையெல்​லாம் ஏற்காத கவுன்​சிலர்​கள், “அதெல்​லாம் எங்களுக்​குத் தெரி​யாது… எங்களுக்​குச் சேர வேண்​டியதைக் கொடுத்​துட்டு அப்புறமா கவுன்​சில் கூட்​டத்தை கூட்டுங்க. இல்ல, கூட்​டா​மலேயே போங்க; அதப்​பத்தி எங்களுக்கு கவலை இல்லை. ஆனா, எங்களை ஏமாத்தி இன்னும் இருக்கிற ஒன்னரை வருஷத்தை ஓட்டிடலாம்ன்னு மட்டும் கனவு காணாதீங்க” என மிரட்டும் தொனி​யில் பேசி​ய​தால் கவுன்​சில் கூட்​டத்தை மறு தேதி குறிப்​பி​டாமல் ஒத்தி​வைத்​திருக்​கிறார் சேர்​மன்.

இதையெல்​லாம் தனக்கு நெருக்​க​மானவர்​களிடம் சொல்லி வேதனைப்​பட்ட சேர்மன் சங்கீதா, “வழக்கமா எதிர்க்​கட்சி கவுன்​சிலர்கள் தான் இப்படி எல்லாம் பிரச்சினை பண்ணு​வாங்​கன்னு கேள்​விப்​பட்​டிருக்​கிறேன். ஆனா, இங்க நம்ம கட்சிக்​காரங்களே நெருக்கடி கொடுக்​கிறாங்க. இதையெல்​லாம் பார்க்​கும் போது, ஏன் தான் சேர்மனா வந்தோம்னு இருக்கு. லட்சத்துல செலவழிச்சு பதவிக்கு வந்த இவங்​களுக்கே இத்தனை எதிர்​பார்ப்பு இருக்​கும் போது, கோடிகளை செலவழிச்ச நான் எங்கே போவது?” என்று புலம்​பினா​ராம்.

சபியுல்லா

ஆனால், இதையெல்​லாம் காட்​டிக்​கொள்​ளாமல் நம்மிடம் பேசிய சேர்மன் சங்கீதா வெங்​கடேஷ், “கவுன்​சில் கூட்டம் காலை​யில் நடைபெறும் என அறிவித்​தோம். கவுன்​சிலர்கள் யாரும் வரவில்லை. கேட்​டால், வார்​டுக்கு ஒதுக்​கப்​பட்ட வளர்ச்சிப் பணிகளில் சில கவுன்​சிலர்கள் திருப்தி இல்லை என்றனர். மேலும், வெளி​யில் சொல்ல முடியாத சில விஷயங்​களும் இதில் உள்ளன. இந்த பிரச்சினைகளை எல்லாம் தீர்க்க ஒரு நாள் போதாது என்ப​தால் கூட்​டத்தை தள்ளி​வைத்​தோம்’’ என்றார் கூலாக.

வைஸ் சேர்மன் சபியுல்​லாவோ, ‘‘எந்த வார்​டில் எது முக்​கியப் பிரச்சினை என்பதை வார்டு கவுன்​சிலர்​களிடம் கேட்டு அதன் பிறகு பணிகளை தேர்வு செய்து அதற்கான நிதியை ஒதுக்கி அதன் பிறகு கவுன்​சில் கூட்​டத்தை கூட்டுங்கள் என நகராட்சி தலைவருக்கு புரி​யும்​படி(!) அறிவுறுத்தி இருக்​கிறோம். அதன்படி அவர் நடந்து​கொள்​வார் என்று நம்​பு​கிறோம்’’ என்​றார்.

இதனிடையே இருதரப்புக்கும் இடையில் நடந்த ‘சமாதான’ பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கடந்த 18ம் தேதி நகர்மன்ற சாதாரண கூட்டம் ‘சுமூகமாக’ நடத்தப்பட்டு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேறியிருக்கின்றன!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x