Published : 20 Jul 2025 08:38 AM
Last Updated : 20 Jul 2025 08:38 AM

வைகை, தாமிரபரணியை சுத்தப்படுத்துவதாக கூறுவது ஊழலுக்கு அச்சாரம்: எல்.முருகன் விமர்சனம்

சென்னை: வை​கை, தாமிரபரணியை சுத்​தப்​படுத்​து​வ​தாகக் கூறி அடுத்த ஊழலுக்கு அச்​சா​ரம் போட திமுக அரசு முயற்சி செய்​வ​தாக மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் விமர்​சித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடர் 21-ம் தேதி நடை​பெறவுள்ள நிலை​யில், தமிழக முதல்​வரும், திமுக தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லின் தனது எம்​.பி.க்​களை கூட்டி 11 ஆண்​டு​களாக மத்​திய அரசு தமிழகத்தை வஞ்​சித்து வரு​வ​தாக வழக்​கம்​போல வெறுப்பு அரசி​யல் பேசி தீர்​மானம் நிறைவேற்றி இருக்​கிறார்.

கடந்த மே மாதம் டெல்​லி​யில் நடந்த நிதி ஆயோக் கூட்​டத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளை சுத்​தம் செய்து மீட்​கும் புதிய திட்​டம் குறித்து வலி​யுறுத்​தி​ய​தாக தெரி​வித்​தார். கூவம் ஆற்றை சுத்​தம் செய்​வ​தாகக் கூறி, மறைந்த முதல்​வர் கருணாநிதி காலம் முதல் திமுக தமிழகத்தை ஏமாற்றி வரு​கிறது. கூவம் ஆறு சுத்​தப்​படுத்​தும் திட்​டத்தை காட்​டியே பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டி விட்​டனர்.

இப்​போது வைகை, தாமிரபரணியை சுத்​தப்​படுத்​து​வ​தாகக் கூறி அடுத்த ஊழலுக்கு அச்​சா​ரம் போட முடி​யுமா என அலைகின்​றனர். ஒவ்​வொரு பிரச்​சினை​யிலும் மத்​திய அரசிடம் கேட்​டு​விட்​டோம் செய்​ய​வில்லை என பழி போட்டு தப்​பித்​துக் கொள்​ளலாமென முதல்​வர் எண்​ணுகிறார். தமிழகத்​துக்கு மத்​திய அரசு எந்த நிதி தரவில்லை என கூறுங்​கள் என்று மத்​திய அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் பல முறை கேட்​டு​விட்​டார். ஆனால், இவர்​களிடம் பதில் இல்​லை. பிரதமர் மோடி தலை​மையி​லான மத்​திய அரசு தமிழகத்​துக்கு ரூ.11 லட்​சம் கோடி ரூபாய்க்​கும் அதி​க​மாக நிதி வழங்​கி​யுள்​ளது.

இந்த நிதி​யின் மூலம் தமிழகத்​தில் நிறைவேற்​றப்​பட்ட மக்​கள் நலத்​திட்​டங்​கள் என்​னென்ன, பல ஆண்​டு​களுக்கு பிறகு பைசா அளவில் உயர்த்​தப்​பட்ட ரயில் கட்​ட​ணம் ஏழை எளிய மக்​களை பாதிப்​ப​தாக நீலிக் கண்​ணீர்வடிக்​கும் முதல்​வர் ஸ்டா​லின், தமிழகத்​தில் மூன்று மடங்கு சொத்து வரி உயர்த்​தப்​பட்​டதற்கு என்ன பதில் சொல்​லப்​போகிறார்?

தற்​போது சிறு கடைகளைக் கூட விட்​டு​வைக்​காமல் மீண்​டும் மின் கட்​ட​ணத்தை உயர்த்​தி​யுள்​ளது தமிழக அரசு. சொந்த மாநில மக்​களின் ரத்​தத்தை உறிஞ்சி குடிக்​கும் முதல்​வருக்கு மனசாட்சி இருந்​தால் ரயில் கட்​ட​ணத்தை பற்றி பேசு​வா​ரா, திமுக குடும்​பம் மட்​டுமே குதூகல​மாக வாழும் இந்த திமுக ஆட்​சியை வீட்​டுக்கு அனுப்​புவதற்கு தமிழக மக்​கள் எப்​போதோ தயா​ராகி விட்​டார்​கள். 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில், அதி​முக - பாஜக கூட்​டணி வரலாறு காணாத வெற்றி பெற்று மக்​கள் விரும்​பும் நல்​லாட்​சி​யை வழங்​கும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x