Published : 20 Jul 2025 08:35 AM
Last Updated : 20 Jul 2025 08:35 AM

பாலியல் புகார்களுக்காக கல்லூரிகளிலும் உள்ளக குழுவை அமைக்காதது ஏன்? - அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

சென்னை: தமிழகத்​தில் பாலியல் குற்​றமே நடக்​க​வில்லை என்று கணக்கு காட்​டு​வதற்​காக, கல்​லூரி​களில் உள்ளக புகார் குழுக்​களையே அமைக்​காமல் திமுக அரசு கிடப்​பில் போட்​டுள்​ளதா என்று பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

இதுகுறித்த அவரின் வலைதள பதி​வு: தமிழகத்​தில் 180 அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​கள் உள்​ளன. இதில் 46 கல்​லூரி​களில் பாலியல் புகார்​களை தெரிவிக்​கும் உள்ளக புகார் குழுக்​கள் இல்லை என்​பது தகவல் அறி​யும் உரிமை சட்​டம் மூலம் தெரிய​வந்​துள்​ளது. இது அதிர்ச்சி அளிக்​கிறது. அதி​லும், தங்​கள் கல்​லூரி​யில் இந்த குழு இருக்​கிற​தா, இல்​லையா என்​பதை தெரிவிக்​கவே 113 அரசு கல்​லூரி​கள் அலட்​சி​யம் காட்​டி​யுள்​ளன.

தவிர, புகார் குழுக்​கள் அமைக்​கப்​பட்ட தஞ்​சாவூர், ராசிபுரம், நாமக்​கல் அரசு கல்​லூரி​களில் தலா ஒரே ஒரு பாலியல் புகார் மட்​டுமே பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. அது​வும் ‘சமா​தான​மாக’ முடித்து வைக்​கப்​பட்​டுள்​ளது. பாலியல் வன்​கொடுமை தடுப்பு சட்ட விதி​முறை​களின்​படி, 10-க்​கும் மேற்​பட்ட பெண்​கள் கொண்ட அனைத்து நிறு​வனங்​களி​லும் உள்ளக புகார் குழு அமைக்​கப்​படு​வது கட்​டா​யம். ஆனால், அரசு கல்​லூரி​களி​லேயே புகார் குழு அமைக்​கப்​ப​டா​மல் உள்​ளது. இதன்​மூலம், திமுகஅரசுக்கு சட்​டம் மீதும், சட்​டம் - ஒழுங்கை பேணுவ​தி​லும் அக்​கறை இல்​லாதது தெளி​வாகிறது.

அண்ணா பல்​கலைக்​கழக மாணவிக்கு திமுக ஆதர​வாள​ரால் நிகழ்ந்த வன்​கொடுமையை கண்டு தமிழகமே கொதித்​தெழுந்த பிறகும், கல்வி நிலை​யங்​களில் மாணவி​களின் பாது​காப்​புக்​காக செய்ய வேண்​டிய அடிப்​படை கட்​டமைப்​பைகூட திமுக அரசு செய்ய தவறியது மிக கொடுமை​யானது. பாலியல் புகார்​களை தெரிவிக்​கும் உள்ளக புகார் குழுக்​களை அனைத்து அரசு கல்​லூரி​களி​லும் தி​முக அரசு உடனே அமைக்​க வேண்​டும்​. இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x