Published : 20 Jul 2025 08:20 AM
Last Updated : 20 Jul 2025 08:20 AM

பணிநிரந்தரம் கோரி சென்னையில் 3 ஆயிரம் பேர் பேரணி: பகுதிநேர ஆசிரியர்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பகுதிநேர ஆசிரியர்கள் சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று பேரணி நடத்தினர். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: பணிநிரந்​தம் செய்​யக்​கோரி பகு​திநேர ஆசிரியர்​கள் கடந்த 12 நாட்​கள் மேற்​கொண்ட தொடர் போராட்​டம் முடிவுக்கு வந்​தது. இறு​தி​நாளில் 3 ஆயிரம் பேர் பேரணி​யில் பங்​கேற்​றனர்.

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் ஆசிரியர் பற்​றாக்​குறையை சமாளிக்க பகு​திநேர ஆசிரியர்​கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்​பூ​தி​யத்​தில் பணிநியமனம் செய்​யப்​படு​கின்​றனர். அதன்​படி தற்​போது 12 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பகு​திநேர ஆசிரியர்​கள் பணிபுரிந்து வரு​கின்​றனர். இவர்​கள் பள்​ளி​களில் வாரந்​தோறும் 3 நாட்​கள் பாடம் நடத்​து​வார்​கள். அதற்கு ரூ.12,500 மாத சம்​பள​மாக தரப்​படு​கிறது. மேலும், பணிநிரந்​தரம் செய்​யக் கோரி பகு​தி
நேர ஆசிரியர்​கள் நீண்​ட​கால​மாக வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

இதற்​கிடையே ஆட்​சிக்கு வந்​தால் தற்​காலிக ஆசிரியர்​கள் பணிநிரந்​தரம் செய்​யப்​படு​வார்​கள் என்று திமுக தேர்​தல் அறிக்​கை​யில் வாக்​குறுதி அளித்​தது. அந்த கோரிக்​கையை நிறைவேற்ற வலி​யுறுத்தி பகு​தி நேரஆசிரியர் சங்​கங்​களின் ஒருங்​கிணைப்​புக்​குழு சார்​பில் சென்​னை​யில் கடந்த ஜூலை 8-ம் தேதி முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. தின​மும் வெவ்​வேறு வித​மாக போராட்​டங்​களை முன்​னெடுத்து கோரிக்​கைகளை வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

அதன்​படி 12-வது நாளான நேற்று 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பகு​திநேர ஆசிரியர்​கள் தங்​கள் கோரிக்​கையை முன்​வைத்து சென்னை சிந்​தா​திரிப்​பேட்டை சித்ரா தியேட்​டர் முதல் எழும்​பூர் ராஜரத்​தினம் ஸ்டேடி​யம் வரை பேரணி நடத்​தினர். பேரணி 12 மணிக்கு முடிந்த நிலை​யில் அவர்​களை கலைந்து போக கூறி போலீஸார் அறி​வுறுத்​தினர். அப்​போது ஆசிரியர்​கள் பலர் சாலை​யில் அமர்ந்து மறியலில் ஈடு​பட்​டனர்.

இதையடுத்து போலீ​ஸார் அவர்​களை கைதுசெய்து கோயம்​பேடு, கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யம், எழும்​பூர், சென்ட்​ரல் ரயில் நிலை​யம் போன்ற பகு​தி​களில் இறக்​கி​விட்​டனர். போராட்​டத்தை தொடர்ந்​தால் நடவடிக்கை எடுக்​கப்​படும். எனவே, அவர​வர் சொந்த ஊர்​களுக்கு செல்ல வேண்​டும் என எச்​சரித்து அனுப்​பினர். மேலும், கூட்​டமைப்​பின் முக்​கிய நிர்​வாகி​கள் 29 பேரை கைது செய்து வழக்​குப்​ப​திவு செய்தனர்.

இதுகுறித்து பகு​திநேர ஆசிரியர்​களிடம் கேட்​ட​போது, ‘‘எங்​களின் தொடர் போராட்​டத்​தின் மூலம் அரசின் கவனத்தை ஈர்த்​துள்​ளோம். நல்ல செய்தி வரும் என்று துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் தகவல் தெரி​வித்​துள்​ளார். மேலும், குடும்ப பொருளா​தா​ரச் சூழலை கருத்​தில் கொண்டு போராட்​டத்தை தற்​காலிக​மாக முடித்து கொள்​கிறோம். கோரிக்​கைகள் நிறைவேறா​விட்​டால் அடுத்த மாதம் மீண்​டும் போராட்​டத்தை முன்​னெடுப்​போம்’’ என்​றனர். மறு​புறம் பகு​திநேர ஆசிரியர்​களின் ஊதி​யத்தை சற்று உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு செய்​துள்​ள​தாக தகவல்​கள்​ கிடைத்​துள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x