Published : 20 Jul 2025 08:03 AM
Last Updated : 20 Jul 2025 08:03 AM

திமுகவை ஆட்​சியில் இருந்து விரட்டுவதுதான் அதிமுக - பாஜக கூட்டணியின் ஒரே நோக்கம்: அண்ணாமலை உறுதி

நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை.

நாமக்கல்: வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேஜகூ முதல்​வர் வேட்​பாளர் பழனி​சாமி என்​ப​தில் குழப்​பமில்லை என்று பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கூறி​னார்.

மறைந்த மூத்த தலை​வர் ஆடிட்​டர் ரமேஷின் 12-ம் ஆண்டு நினை​வேந்​தல் நிகழ்ச்சி நாமக்​கல்​லில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற அண்​ணா​மலை பேசும்​போது, “ஆடிட்​டர் ரமேஷ் கொலை வழக்கு விசா​ரணையை அமித்ஷா உள்​ளிட்​டோர் உன்​னிப்​பாக கண்​காணித்து வரு​கின்​றனர். விரை​வில் நீதி கிடைக்​கும்” என்​றார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பள்​ளி​பாளை​யம், குமார​பாளை​யத்தில் விசைத்​தறி தொழிலா​ளர்​களை ஏமாற்​றி, கிட்னி மோசடிசெய்த சம்​பவத்​தில் திமுக நிர்​வாகி​கள் ஈடு​பட்​டிருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. தமிழக அரசு சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைத்​து, மோசடி​யில் ஈடு​பட்​ட​வர்​களைக் கண்​டறிந்​து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

மயி​லாடு​துறை​யில் பிரஸ்​மீட் நடத்​தும் அளவுக்கு டிஎஸ்பி சென்​றுள்​ளார். காவல் துறை​யின் அத்​து​மீறல்​களே இதற்கு காரணம். இதுகுறித்து விசா​ரிக்​காமல், அவரை சஸ்​பெண்ட் செய்​வது நியாயமல்ல. தமிழக அரசு நிர்​வாகம் சீர்​குலைந்​துள்​ளதையே இச்​சம்​பவம் வெளிப்​படுத்​துகிறது. இந்த விவ​காரத்​தில் முதல்​வர் தலை​யிட்​டு, சம்​பந்​தப்​பட்ட டிஎஸ்​பிக்கு நியாய​மும், நீதி​யும் வழங்க வேண்​டும்.

வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக​வுடன் பாஜக கூட்​டணி அமைத்​துள்​ளதன் ஒரே நோக்​கம் திமுகவை ஆட்​சி​யில் இருந்து விரட்​டு​வது​தான். 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் முதல்​வர் வேட்​பாளர் பழனி​சாமி என்​பதை அறி​வித்​து​விட்​டோம். இதில் எந்த குழப்​ப​மும் இல்​லை. காம​ராஜரை விமர்​சித்​ததையடுத்​து, திமுக கூட்​ட​ணி​யில் தொடரலாமா அல்​லது வில​கலாமா என்ற மனநிலைக்கு காங்​கிரஸ் கட்​சி​யினர் தள்​ளப்​பட்​டுள்​ளனர்​. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x