Published : 20 Jul 2025 08:00 AM
Last Updated : 20 Jul 2025 08:00 AM
சென்னை: பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் க.பாலு நேற்று வெளியிட்ட அறிக்கை: உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு 1,200 நாட்களுக்கு மேலாகி யும் உள்இடஒதுக்கீடு வழங்க திமுக அரசு மறுக்கிறது. எனவே, திமுக அரசைக் கண்டித்தும், உடனடியாக வன்னியர் உள் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஜூலை 20-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடைபெற உள்ளது. பாமக தலைவர் அன்புமணி, போராட்டத்துக்கு தலைமை வகித்து உரையாற்றுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT