Published : 20 Jul 2025 07:57 AM
Last Updated : 20 Jul 2025 07:57 AM
நாகர்கோவில்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆண்டுதோறும் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் ஆர்எஸ்எஸ் மற்றும் விவேகானந்த கேந்திர நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவது வழக்கம்.
இந்த ஆண்டு 4 நாட்கள் சுற்றுப் பயணமாக நேற்று முன்தினம் மாலை கன்னியாகுமரி வந்தார். விவேகானந்தா கேந்திராவில் தங்கியிருக்கும் அவர், விவேகானந்தா கேந்திரா நிர்வாகிகள் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இன்று காலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு, விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்கிறார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முக்கிய தலைவர்களுடன் அவர் இன்று ஆலோசனை நடத்துகிறார். நாளை காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார். மோகன் பாகவத் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT