Published : 20 Jul 2025 07:45 AM
Last Updated : 20 Jul 2025 07:45 AM

மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி பணியிடை நீக்கம்: உயிருக்கு ஆபத்து உள்ளதால் பாதுகாப்பு வழங்க கோரிக்கை

மயி​லாடு​துறை: அரசு வாக​னம் பறிக்​கப்​பட்ட விவ​காரத்​தில் உயர் அதி​காரி​கள் மீது குற்​றம்​சாட்​டிய மயி​லாடு​துறை மது​விலக்கு டிஎஸ்பி சுந்​தரேசனை பணி​யிடை நீக்​கம் செய்து உள்​துறைச் செயலர் தீரஜ்கு​மார் உத்​தர​விட்​டுள்​ளார்.

மயி​லாடு​துறை​யில் மது​விலக்கு அமலாக்​கப் பிரிவு டிஎஸ்​பி​யாகப் பணி​யாற்றி வந்​தவர் சுந்​தரேசன். இவர், தான் நேர்​மை​யாகப் பணி​யாற்​றிய​தால், தனது அரசு வாக​னம் பறிக்​கப்​பட்​ட​தாக புகார் தெரி​வித்​தார். மேலும், எஸ்​.பி.உள்​ளிட்ட உயர் அதி​காரி​கள் மீதும் புகார் தெரி​வித்​திருந்​தார். காவல் துறை நடத்தை விதி​களை மீறிய​தால், இவரை பணி​யிடை நீக்​கம் செய்​யு​மாறு மத்​தியமண்டல ஐ.ஜி.க்​கு, தஞ்​சாவூர் சரக டிஐஜி ஜியா​வுல் ஹக் பரிந்​துரை செய்​திருந்​தார்.

இதையடுத்​து, அடிப்​படை ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு​களைகூறி ஊடகங்​களுக்கு பேட்டி அளித்​த​தா​லும், பொது ஊழியருக்​கான விதி​களை மீறி ஒழுங்​கீன செயல்​களில் ஈடு​பட்​ட​தா​லும் அவரை பணி​யிடை நீக்​கம் செய்து உள்​துறைச் செயலர் தீரஜ்கு​மார் நேற்​றிரவு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார். மேலும், முன் அனு​ம​தி​யின்றி மயி​லாடு​துறையை விட்டு வெளியூர்​களுக்கு செல்​லக் கூடாது எனவும் அந்த உத்​தர​வில் கூறப்​பட்​டுள்​ளது.

முன்​ன​தாக, மயி​லாடு​துறை​யில் டிஎஸ்பி சுந்​தரேசன் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: நான் உயர் அதி​காரி​கள் மீது புகார் கூறிய​தால், தற்​போது என் மீது பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களை முன்​வைக்​கின்​றனர். நான் தவறு செய்​திருந்​தால், அப்​போதே என்னை பணி​யிடை நீக்​கம் செய்​திருக்க வேண்​டும். என் மீது பாலியல் உட்பட பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களை சொல்​கிறார்​கள். ஆனால், அதற்​காக அப்​போது ஏன் என்னை பணி​யிடை நீக்​கம் செய்​ய​வில்​லை?

எனக்கு ஏற்​பட்​டுள்ள இந்த நிலை​யால் எனது தந்​தைக்கு உடல்​நலம் பாதிக்​கப்​பட்​டு, சென்​னை​யில் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். அவரை பார்க்க செல்​வதற்கு கூட எனக்கு அனு​மதி வழங்​க​வில்​லை. நான் மிகுந்த மன அழுத்​தத்​தில் உள்​ளேன். எனது உயிருக்கு ஆபத்து உள்​ளது. எனக்கு பாது​காப்பு கொடுக்க வேண்​டும். தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் இதில் தலை​யிட்டு, விசா​ரிக்க வேண்​டும். தமிழக முதல்​வரும் இந்த விவ​காரத்​தில் நேரடி​யாக தலை​யிட வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x