Published : 20 Jul 2025 07:41 AM
Last Updated : 20 Jul 2025 07:41 AM

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழகத்தில் விலைவாசி உயர்வு கடுமையாக இருக்கும்: இபிஎஸ் விமர்சனம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் மெழுகுவத்தி ஏந்தி பிரார்த்தனை செய்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.

நாகப்பட்டினம்: ​தி​முக எப்​போதெல்​லாம் ஆட்​சிக்கு வரு​கிறதோ, அப்​போதெல்​லாம் விலை​வாசி உயர்வு கடுமை​யாக இருக்​கும் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப் பயணத்தை மேற்​கொண்​டுள்ள பழனி​சாமி, நாகை அவுரித் திடலில் நேற்று மாலை பொது​மக்​கள் மத்​தி​யில் பேசி​ய​தாவது: திமுக ஆட்​சி​யில் எந்த பெரிய திட்​டத்​தை​யும் கொண்​டு​வர​வில்​லை. முதல்​வர் ஸ்டா​லினுக்கு மக்​களைப் பற்றி கவலை​யில்​லை. அவரது குடும்​பத்​தினர் பற்​றித்​தான் கவலைப்​படு​கிறார்.

அவர்​களுக்கு என்ன செய்ய வேண்​டும், என்ன அதி​காரம் கொடுக்க வேண்​டும் என்​கிற சிந்​தனை​தான் அவரிடம் உள்​ளது. இதற்​கெல்​லாம் 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு கட்​டும். அதி​முக ஆட்​சி​யில் மக்​களுக்கு தேவை​யான திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்​டன. மீத்​தேன், ஹைட்​ரோ​கார்​பன் எடுப்​ப​தற்​காக பொன்​விளை​யும் பூமியை தாரை வார்க்க முயன்​றார்​கள். அப்​போது அதி​முக அரசு, மத்​திய அரசுடன் பேசி, டெல்டா பகு​தியை பாது​காக்​கப்​பட்ட வேளாண் மண்​டல​மாக அறி​வித்​தது.

திமுக எப்​போதெல்​லாம் ஆட்​சிக்கு வரு​கிறதோ, அப்​போதெல்​லாம் விலை​வாசி உயர்வு கடுமை​யாக இருக்​கும். நான் முதல்​வ​ராக இருந்​த​போது கடும் வறட்​சி. குடிப்​ப​தற்​கு​கூட தண்​ணீர் இல்​லை. அதற்கு அடுத்த வருடம் கஜா புய​லால் பலத்த சேதம். பின்​னர் கரோனா பரவலால் ஒரு வருடம் யாரும் வீட்டை விட்டு நகர முடிய​வில்​லை. இப்​படிப்​பட்ட கால​கட்​டத்​தில்​கூட விலை​வாசி உயர​வில்​லை. ஆனால், தற்​போது நிர்வாகத் திறமை இல்​லாமல், மக்​களின் பிரச்​சினை​கள் தெரி​யாமல் இருக்​கிறார் முதல்வர் மு.க.ஸ்டா​லின்.

கடந்த அதி​முக ஆட்​சி​யில் நாகை மாவட்​டம் பூதங்​குடி கிராமத்​தில் தடுப்​பணை கட்ட திட்​ட​மிட்​டோம். ஆனால், தற்​போது உத்​தமசோழபுரம் கிராமத்​தில் தடுப்​பணை கட்​டப்​படு​கிறது. இதனால் கடல் நீர் உள்​வாங்​கி, 32 கிராமங்​களில் விவ​சாய நிலங்​கள் பாதிக்​கப்​படும். எனவே, பூதங்​குடி​யிலேயே தடுப்​பணை கட்ட வேண்​டும். திமுக​வினருக்கு ஆதர​வாக திட்​டம் தீட்​டி​னால், அதி​முக சார்​பில் போராட்​டம் நடத்​தப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.
முன்​ன​தாக, வேளாங்​கண்ணி பேரால​யத்​தில் பழனி​சாமி சிறப்பு பிரார்த்​தனை செய்​தார். அப்​போது, பேராலய அதிபர் இருதய​ராஜ் தலை​மை​யில் சிறப்பு வழிபாடு நடத்​தப்​பட்​டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x