Published : 19 Jul 2025 05:42 AM
Last Updated : 19 Jul 2025 05:42 AM

திருநின்றவூர் நகராட்சியை கண்டித்து ஜூலை 25-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: திருநின்​றவூர் நகராட்​சியை கண்​டித்து அதி​முக சார்​பில் ஜூலை 25-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறவுள்​ளது.

இது தொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை: திரு​வள்​ளூர் மாவட்​டம், திருநின்​றவூர் நகராட்சிக்கு உட்​பட்ட இடங்​களில் குப்பை சரிவர அள்​ளப்​ப​டாத காரணத்​தால் சுகா​தா​ரச் சீர்​கேடு உள்​ளிட்ட பல்​வேறு சிரமங்​கள் ஏற்​பட்​டுள்​ளன. கொசுக்​களை அழிப்​ப​தற்​காக நகராட்​சிக்கு உட்​பட்ட இடங்​களில் கொசு மருந்து அடிப்​ப​தில்​லை.

மேலும், இப்​பகு​தி​யில் உள்ள சாலைகள் சீரமைக்​கப்​ப​டா​மல் உள்​ளன. தெரு விளக்​கு​கள் சரிவர எரிவ​தில்​லை. முறை​யாக பராமரிக்கப்​படு​வதும் இல்​லை. பொது​மக்​களுக்கு தங்​குதடை​யின்றி குடிநீர் வழங்​கப்​படு​வ​தில்​லை. நகராட்​சி​யின் இது​போன்ற நிர்வாகச் சீர்​கேடு​களை சரிசெய்​வது குறித்​து, நகராட்சி நிர்​வாகத்தை அணுகி​னால் உரிய முக்​கி​யத்​து​வம் தரப்​படு​வ​தில்​லை.

எனவே, திருநின்​றவூர் நகராட்​சி​யில் நிலவி வரும் பல்​வேறு நிர்​வாகச் சீர்​கேடு​களை சரிசெய்​யாமல் மெத்​தன​மாக இருந்​து ​வரும் திமுக அரசு மற்​றும் நகராட்சி நிர்​வாகத்​தைக் கண்​டித்​தும், மக்​களின் அடிப்​படைத் தேவை​களை உடனுக்​குடன் நிறைவேற்ற வலியுறுத்​தி​யும், திரு​வள்​ளூர் தெற்கு மாவட்ட அதி​முக சார்​பில் ஜூலை 25-ம் தேதி மாலை 4 மணிக்​கு, திருநின்​றவூர் நகர காந்தி சிலை எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும்.

இந்​தக் கண்டன ஆர்ப்​பாட்​டம், கட்​சி​யின் இலக்​கிய அணிச் செய​லா​ளர் வைகைச் செல்​வன் தலை​மை​யிலும், முன்​னாள் அமைச்​சர் அப்​துல் ரஹீம், அமைப்​புச் செய​லா​ளர் திரு​வேற்​காடு பா.சீனி​வாசன், திரு​வள்​ளூர் தெற்கு மாவட்ட செய​லா​ளர் அலெக்​சாண்​டர் ஆகியோர் முன்​னிலை​யிலும் நடை​பெறும்​. இவ்​வாறு அறிக்​கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x