Published : 19 Jul 2025 05:40 AM
Last Updated : 19 Jul 2025 05:40 AM

திமுகவிடம் பணம் வாங்கியபோதே கம்யூனிஸ்ட் கதை முடிந்துவிட்டது: பழனிசாமி விமர்சனம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் நெல் வயலில் இறங்கி பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, அங்கிருந்த விவசாயத் தொழிலாளர்களிடம் கலந்துரையாடினார்.

திருவாரூர்: கம்​யூனிஸ்ட் கட்​சி​யினர் திமுக​விடம் பணம் வாங்​கிய​போதே அவர்​களது கதை முடிந்​து​விட்​டது என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப் பயணம் மேற்​கொண்​டுள்ள பழனி​சாமி, திரு​வாரூர் மாவட்​டம் நன்​னிலத்​தில் பொது​மக்​களிடையே நேற்று பேசி​ய​தாவது: கடந்த திமுக ஆட்​சி​யில்​தான் மீத்​தேன் எடுக்​கும் ஒப்​பந்​தத்​தில் கையெழுத்து போட்​டார்​கள்.

அதி​முக ஆட்​சி​யில் டெல்டா பகு​தியை பாது​காக்​கப்​பட்ட வேளாண் மண்​டல​மாக அறி​வித்​தோம். விவ​சா​யிகளுக்கு எப்​போதும் ஆதர​வு​கரம் நீட்​டும் கட்சி அதி​முக. காவிரி பிரச்​சினைக்கு சட்​டப் போராட்​டம் மூலம் உச்ச நீதி​மன்ற தீர்ப்பை பெற்​றுத் தந்தது அதி​முக.

கம்​யூனிஸ்ட் கட்​சிகள் திமுக கூட்​ட​ணி​யில் இருப்​ப​தால் அடிமை சாசனம் எழு​திக் கொடுத்​து​விட்​டன. கம்​யூனிஸ்ட் கட்​சி​யினர் எப்​போது திமுக​விடம் பணம் வாங்​கி​னார்​களோ, அப்​போதே அவர்​களது கதை முடிந்​து​விட்​டது. தேர்​தலில் சீட் குறைத்​து​விடு​வார்​கள் என்​ப​தால், திமுகவை கண்​டித்து எந்​தப் போராட்​டத்​தை​யும் அவர்​கள் நடத்​து​வ​தில்​லை.

திமுக ஆட்​சி​யில் என்ன சாதனை​களை செய்​தார்​கள் என்று கூற முடி​யு​மா? உதயநி​தியை துணை முதல்​வர் ஆக்​கியது​தான் ஸ்டா​லின் செய்த ஒரே சாதனை. தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு முற்​றி​லும் சீர்​குலைந்து விட்​டது. திரு​வள்​ளூர் மாவட்​டம் கும்​மிடிப்​பூண்​டி​யில் 10 வயது சிறுமி பாலியல் துன்​புறுத்​தலுக்கு உள்​ளாக்​கப்​பட்​டுள்​ளார்.

இது​வரை குற்​ற​வாளியை கண்​டு​பிடிக்க முடிய​வில்​லை. சிறுமி முதல் பாட்டி வரை யாருக்​கும் பாது​காப்​பில்​லை. இப்​படிப்​பட்ட அரசு தேவை​யா? ஸ்டா​லின் அரசு ஃபெயி​லியர் மாடல் அரசு. இதனால் மக்​கள் அவருக்கு ‘பை பை’ சொல்​லப் போகிறார்​கள். இவ்​வாறு பழனி​சாமி பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x