Published : 19 Jul 2025 04:34 AM
Last Updated : 19 Jul 2025 04:34 AM

அரசு சார்பில் சென்னை இதழியல் நிறுவனம் தொடக்கம்: நிர்வாக குழு தலைவராக ‘இந்து’ என்.ரவி நியமனம்

தமிழக அரசு தொடங்கிய சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவராக ‘தி இந்து’ குழுமத்தின் இயக்குநரும் ‘தி இந்து’ நாளிதழின் முன்னாள் முதன்மை ஆசிரியருமான என்.ரவி, தலைமை இயக்குநராக மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஆணைகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். உடன் துறை செயலர் வே.ராஜாராமன், இயக்குநர் இரா.வைத்திநாதன்.

சென்னை: குறைந்த கட்​ட​ணத்​தில் இதழியல் படிப்பை வழங்​கும் வகை​யில் தமிழக அரசு சார்​பில் ‘சென்னை இதழியல் நிறு​வனம்’ தொடங்க முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார். இந்த நிறு​வனத்​தில் இதழியல் முது​நிலை பட்டய படிப்பை இந்த கல்வி ஆண்டு முதல் தொடங்க அரசு ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளது. நிர்வாகக் குழு தலைவராக ‘தி இந்து’ குழுமத்தின் இயக்குநரும் ‘தி இந்து’ நாளிதழின் முன்னாள் முதன்மை ஆசிரியருமான என்.ரவி நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இதுதொடர்​பாக தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: இதழியல் துறை​யில் ஆர்​வம் உள்ள இளைஞர்​களை ஊக்​குவிக்​கும் நோக்​குட​னும், வளர்ந்து வரும் தொழில்​நுட்ப வளர்ச்​சிக்கு ஏற்ப, ஊடக கல்​வியை வழங்​கு​வதற்​காக​வும், இதழியலை தொழிலாக தொடங்க விரும்​பும் தமிழக இளைஞர்​களுக்கு குறைந்த கட்​ட​ணத்​தில் முது​நிலை பட்டய படிப்பை வழங்​கு​வதற்​காக​வும் தமிழக அரசு சார்​பில் ‘சென்னை இதழியல் நிறு​வனம்’ தொடங்க முதல்​வர் ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார்.

இதன்​படி, சென்​னை​யில் 2025-26-ம் கல்வி ஆண்டு முதல் சென்னை இதழியல் கல்வி நிறு​வனம் தொடங்​கப்​படும். இதற்​காக, ரூ.7.75 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. நிறு​வனங்​கள் சட்​டத்​தின்​கீழ் சென்னை இதழியல் நிறு​வனம் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த நிறு​வனத்​தில் இதழியல் முது​நிலை பட்டய படிப்பை நடப்பு (2025- 26) கல்வி ஆண்டு முதல் தொடங்க அரசு ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளது.

இக்​கல்வி நிறு​வனத்​தின் நிர்​வாகக் குழு தலை​வ​ராக நியமிக்​கப்​பட்டுள்ள ‘தி இந்​து’ குழு​ம இயக்​குநரும் ‘தி இந்து’ நாளிதழின் முன்​னாள் முதன்மை ஆசிரியரு​மான என்​.ரவிக்​கும் தலைமை இயக்​குந​ராக நியமிக்​கப்​பட்டுள்ள மூத்த பத்திரி​கையாளர் ஏ.எஸ்​. பன்​னீர் செல்வத்​துக்​கும் அமைச்​சர் மு.பெ.சாமிநாதன் நியமன ஆணை​களை வழங்​கி​னார்.

இதில் துறை செயலர் வே.ராஜா​ராமன், செய்தி மக்​கள் தொடர்பு துறை இயக்​குநர் இரா.​வைத்​தி​நாதன் மற்​றும் அலு​வலர்​கள் பங்​கேற்​றனர். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x