Published : 18 Jul 2025 01:41 PM
Last Updated : 18 Jul 2025 01:41 PM

கொடைக்கானலில் திடீர் வெள்ளம்: அருவி நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு

கொடைக்கானல் ஓராவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ஆபத்தான முறையில் நின்று புகைப்படம் எடுத்த பரத்.

கொடைக்கானல்: கொடைக்கானல் ஓராவி அருவி யில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி சுற்றுலா வந்த மதுரையைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். கொடைக்கானலில் இருந்து பழநி செல்லும் வழியில் பேத்துப்பாறை அருகே ஓராவி அருவி உள்ளது. ஆண்டு முழுவதும் இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியில் இருந்து 9 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். அனைவரும் ஓராவி அருவிக்குச் சென் றுள்ளனர். அப்போது, ஓராவி அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிப் பகுதியில் ஆபத்தான முறையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த பரத் (25) நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

அவரது நண்பர்கள், உள்ளூர் கிராம மக்கள் உதவியுடன் 3 மணி நேரம் போராடி பரத்தின் உடலை மீட்டனர். அங்கு வந்த கொடைக்கானல் போலீஸார் பரத்தின் உடலை, கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x