Published : 18 Jul 2025 06:26 AM
Last Updated : 18 Jul 2025 06:26 AM

அவசர காலங்களில் பொதுமக்களை மீட்பது தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட பிரம்மாண்ட பேரிடர் ஒத்திகை

பேரிடர் மற்றும் அவசர காலங்களில் பொதுமக்களை மீட்பது தொடர்பாக சென்னை காவல் துறையின் மீட்பு படையினர் நேற்று ஒத்திகை நடத்தினர்.

சென்னை: பேரிடர் மற்​றும் அவசர காலங்​களில் பொது​மக்​களை மீட்​பது தொடர்பாக சென்னை போலீ​ஸார் நேற்று பிரம்​மாண்ட ஒத்​திகை நடத்​தினர். அவசர காலங்​களில் மக்​களை காப்​ப​தற்​கும், உயிர்​களை மீட்​ப​தற்​காக​வும் சென்னை காவல் துறை​யில் பேரிடர் மீட்​புக் குழு உரு​வாக்​கப்​பட்​டது. 290 போலீ​ஸார் கொண்ட இந்த 16 பேரிடர் மீட்​புக் குழு​வினர் ஆங்​காங்கே தனித்​தனி குழு​வாகப் பிரிந்து சென்று பேரிடர் காலங்​களில் மீட்​புப் பணி​களில் ஈடு​படு​வார்​கள்.

அதன் முன்​னேற்​பா​டாக காவல்துறை மீட்​புக் குழு​வினர் மீட்​புப் பணி செய​லாக்​கம், அவசர தேவை​களில் உயிர் பாது​காப்பு மற்​றும் மீட்​புப் பணி தொடர்​பாக நேற்று எழும்​பூர் ராஜரத்​தினம் விளை​யாட்டு மைதானத்​தில் பிரம்​மாண்ட ஒத்​திகை நிகழ்ச்​சியை நடத்​தினர். பயிற்சி பெற்ற 290 போலீ​ஸார் அடங்​கிய 16 சிறப்பு மீட்​புக் குழுக்​களும் இந்​தப் பயிற்​சி​யில் பங்​கேற்​றன.

பாதிக்​கப்​பட்ட பகு​தி​களில் விரை​வாகச் சென்று மீட்​புப் பணி​களை மேற்​கொள்​வது, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு உடனடி முதலுதவி அளித்​தல், வேரோடு சாய்ந்த மரங்​கள் அல்​லது பிற அம்சங்களால் தடைபட்ட சாலைகளை சீர்​படுத்​துதல் மற்​றும் மேம்​பட்ட கயிறு நுட்​பங்​களைப் பயன்​படுத்தி உயர​மான கட்​டிடங்​களில் சிக்​கித் தவிக்​கும் நபர்​களை மீட்​டல் போன்ற ஒத்​தி​கை​யில் ஈடு​பட்​டனர்.

தாழ்​வான மற்​றும் வெள்​ளத்​தால் பாதிக்​கப்​படும் பகு​தி​களி​லிருந்து மக்​களை ரப்​பர் படகு​களைப் பயன்​படுத்தி வெளி​யேற்​று​தல், வலு​வான கட்​டளை மற்​றும் கட்​டுப்​பாட்டு நெறி​முறை​களை நிறு​வுதல் மற்​றும் எந்​த வொரு அவசர நிலைகளின்​போதும் ஒருங்​கிணைந்த மற்​றும் தடையற்ற பதிலை உறுதி செய்​வதற்​கான தகவல் தொடர்பு திட்​டங்​களை ஒத்​திகை பார்த்​தல் ஆகிய​வை​யும் இதில் அடங்​கும்.

இந்த ஒத்​தி​கையை சென்னை தலை​மை​யிடத்து கூடு​தல் காவல் ஆணை​யர் விஜயேந்​திர பிதாரி நேரில் பார்​வை​யிட்டு குழுக்​களின் ஒட்​டுமொத்த தயார் நிலை மற்​றும் செயல்​பாட்​டுத் திறனை ஆய்வு செய்​தார். எந்​தவொரு இயற்கை பேரிடர் சூழ்​நிலை​யிலும் காவல் துறை சரி​யான நேரத்​தில் உதவி வழங்​க​வும் பொது​மக்​களை பாது​காக்​க​வும் நன்கு தயா​ராக இருப்​பதை உறுதி செய்​வதே இந்​தத் தயார் நிலை முயற்​சி​யின் நோக்​கம் என போலீஸ் அதி​காரி​கள்​ தரப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x