Published : 18 Jul 2025 04:55 AM
Last Updated : 18 Jul 2025 04:55 AM

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தகவல்

சென்னை: ‘தமிழகத்​தில் ஆசிரியர்​கள் எப்​போ தெல்​லாம் போராட்​டம் நடத்​தி​யிருக்​கிறார்​களோ, அப்​போதெல்​லாம் ஆட்சி மாற்றம் ஏற்​பட்​டுள்​ளது’ என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்தார். தமிழகத்​தில் அரசு பள்​ளி​களில் ஆசிரியர் பற்​றாக்​குறையை சமாளிக்க பகு​திநேர ஆசிரியர்​கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்​பூ​தி​யத்​தில் பணி நியமனம் செய்யப்​படு​கின்​றனர். அதன்​படி தற்​போது 12 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பகு​தி நேர ஆசிரியர்​கள் பணிபுரிந்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், திமுக தேர்​தல் அறிக்​கை​யில் கூறி​யுள்​ளபடி தங்​களை பணி நிரந்​தரம் செய்​யக்​கோரி, சென்​னை​யில் கடந்த 8-ம் தேதி முதல் தொடர் போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். 10-வது நாளான நேற்று டிபிஐ வளாகம் முன்பு ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்ட ஆசிரியர்​களை, போலீ​ஸார் கைது செய்து திரு​வல்​லிக்கேணி​யில் உள்ள சமூகநலக்​கூடத்​தில் அடைத்து வைத்​தனர்.

இதற்​கிடையே, போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள ஆசிரியர்​களை சந்​தித்து ஆதரவு தெரி​விப்​ப​தற்​காக நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் ஆகியோர் சமூக கூடத்​துக்கு வந்​தனர். ஆனால், அவர்​களுக்கு போலீ​ஸார் அனுமதி தரவில்​லை.

இதுகுறித்து செய்​தி​யாளர்​களிடம் சீமான் கூறும்​போது, ‘‘வீடு தேடி சேவை என்று விளம்​பரம் செய்​யப்​படு​கிறது. ஆனால், மக்​கள் சாலைக்கு வந்து போராடும் நிலையே உள்​ளது. திமுக ஆட்​சிக்கு வந்து 4 ஆண்​டு​களாகி​யும் கொடுத்த வாக்​குறு​தியை நிறை வேற்ற​வில்​லை. இந்த விவ​காரத்​தில் முதல்​வர் ஸ்டா​லின்​தான் முதல் எதிரி. எனவே, ஆசிரியர்​களின் கோரிக்​கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்​டும்’’ என்​றார்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பகு​திநேர ஆசிரியர்​கள் பணி நியமனம் செய்யப்​படு​வார்​கள் என திமுக​வின் தேர்​தல் அறிக்​கை​யில் கூறப்​பட்​டிருந்​தது. ஆனால், திமுக அரசு நிறைவேற்​ற​வில்​லை. அதை நிறைவேற்​றச் சொல்​வது ஆசிரியர்​களின் உரிமை. அந்த வகை​யில், உரிமைக்​காகப் போராடிய பகு​திநேர ஆசிரியர்​கள் சென்​னை​யில் 250 பேரும், தூத்​துக்​குடி​யில் 150 பேரும் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இது கண்​டனத்​துக்​குரியது.

திரு​வள்​ளூர் மாவட்​டம் கும்​மிடிப்​பூண்​டி​யில் 10 வயது பெண் குழந்​தையை தூக்​கிச்​சென்று பாலியல் வன்​கொடுமை செய்த நபரை போலீ​ஸார் இன்​னும் கைது செய்​ய​வில்​லை. அதே​போல், மயி​லாடு​துறை​யில் 23 பார்​களை சீல் வைத்​ததற்​காக டிஎஸ்​பி-யின் அரசு வாக​னம் திரும்​பப் பெறப்​பட்​டுள்​ளது.

ஆனால், உரிமைக்​காகப் போராடிய ஆசிரியர்​களை மட்​டும் காவல்​துறை​யினர் கைது செய்​துள்​ளனர். ஆதி​தி​ரா​விடர் பள்​ளிகளில் 30 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை நடை​பெற​வில்​லை. அதே​போல், தமிழகம் முழு​வதும் உள்ள ஆதி​தி​ரா​விடர் பள்​ளி​களில் 5 ஆயிரத்​துக்கும் மேற்​பட்ட ஆசிரியர்​கள் பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன.

ஆனால், தமிழக முதல்​வர் ஓரணி​யில் திரளுவோம் என ஊர்​வலம் சென்று கொண்​டிருக்​கிறார். ஆசிரியர்​கள் எப்போதெல்லாம் அரசை எதிர்த்து போராடு​கிறார்​களோ, அப்போதெல்லாம் அந்த அரசு வீழ்ந்​திருக்​கிறது. தேர்​தலுக்குப் பிறகு ஆட்சி மாற்​றம் வரும். அதன்​பிறகு நிச்​ச​யம்​ இந்த பிரச்​சினை முடிவுக்​கு வரும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x