Published : 17 Jul 2025 04:37 PM
Last Updated : 17 Jul 2025 04:37 PM

கடலூர் ரயில் விபத்து: தலைமைச் செயலர் பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: கடலூரில் ரயில் மோதி 3 குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலர் உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 8-ம் தேதி கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை தனியார் பள்ளி வேன் கடக்க முயன்றபோது, விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதியது. இதில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சம்பவம் நடைபெற்ற இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க அனுமதி அளித்தும், மாவட்ட ஆட்சியரகம் ஒப்புதல் வழங்காததால் கடந்த ஓராண்டாக பணிகள் நடைபெறவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் விபத்து தொடர்பாக 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ரயில்வே வாரியத் தலைவர், தமிழக அரசின் தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x