Published : 17 Jul 2025 05:45 AM
Last Updated : 17 Jul 2025 05:45 AM

ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமாக திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர ஜி.கே.வாசன் அழைப்பு

தமாகா சார்பில் காமராஜரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், சுதந்திர போராட்ட வீரர் லட்சுமி காந்தன், காமராஜர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் தமிழருவி மணியன், தமாகா பொதுச் செயலாளர்கள் ராஜம் எம்.பி.நாதன், ஜி.ஆர்.வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். | படம்: ம.பிரபு |

சென்னை: தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் ஆட்சி மாற்​றத்​துக்கு அடித்​தள​மாக, திமுகவை எதிர்க்​கும் அனைத்து கட்​சிகளும் ஒரு​மித்த கருத்​தோடு ஒன்​றிணைய வேண்​டும். அந்த கட்​சிகளை ஒன்​று சேர்க்க தமாகா பணி​யாற்​றும் என்று கட்சி தலை​வர் ஜி.கே.​வாசன் தெரி​வித்​துள்​ளார்.

தமாகா சார்​பில், காம​ராஜர் 123-வது பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டம் சென்னை புரசை​வாக்​கத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்றது. கட்சி தலை​வர் ஜி.கே.​வாசன் தலைமை வகித்​தார். காம​ராஜர் மக்​கள் கட்சி நிறுவன தலை​வர் தமிழருவி மணி​யன் முன்னிலை வகித்​தார்.

விழா​வில் ஜி.கே.​வாசன் பேசி​ய​தாவது: காம​ராஜர் வழி​யில் நேர்​மை​யாக பயணம் செய்​யும் கட்​சி, எப்​போதும் கூட்​டணி தர்​மத்தை கடைபிடிக்​கும் கட்சி தமா​கா. நமக்கு ஏற்​பட்ட சோதனை​கள் வேறு கட்​சிக்கு நடந்​திருந்​தால், அரசி​யலை விட்டே போயிருக்​கும். திமுக ஆட்​சி​யில் சட்​டம் - ஒழுங்கு சீர்​குலைந்​துள்​ளது.

கொலை, கொள்​ளை, திருட்​டு, போதைப் பொருள் பழக்​கம், பாலியல் வன்​கொடுமை போன்ற குற்​றங்​கள் அதி​கரித்​துக் கொண்டே செல்​கின்​றன. இதற்கு முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும் என்​றால் ஆட்சி மாற்​றம் ஏற்பட வேண்​டும். அதற்​கு, திமுகவை எதிர்க்​கும் அனைத்து கட்​சிகளும் ஒரு​மித்த கருத்​தோடு ஒன்​றுசேர வேண்​டும்.

தமிழகத்​தில் நூறு சதவீத வளர்ச்​சியை ஏற்​படுத்த வேண்​டு​மா​னால், மத்​திய, மாநில அரசுகள் இடையே இணக்​கம் தேவை. அதற்கு ஏற்ற கூட்​ட​ணி​யோடு, வெளி​யில் இருக்​கும் அத்​தனை கட்​சிகளும் ஒன்​றிணைய வேண்​டும். 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் ஆட்சி மாற்​றத்​துக்கு அடித்​தள​மாக, ஒரு​மித்த கருத்​துடைய கட்​சிகளை ஒன்​றுசேர்க்க தமாகா பணி​யாற்​றும்.

கூட்​டணி கட்​சிகள் இடையே ஏற்ற, இறக்​கமின்​றி, அவர​வர் பலம், வேட்​பாளர் செல்​வாக்​குக்கு ஏற்ப தேர்​தல் களத்​தில் நாம் செயல்​பட்​டால் நூற்​றுக்கு நூறு சதவீதம் வெற்றி உறு​தி. அத்​தகைய ஒரு​மித்த கருத்​து, நமது கூட்​ட​ணி​யில் ஏற்​படும் என நம்​பு​கிறேன். தமிழகத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மேற்​கொண்டு வரும் சுற்​றுப் பயணம், கூட்​ட​ணிக்கு நல்ல பலன் தரும். இவ்வாறு அவர் பேசி​னார்.

முன்​ன​தாக, தமிழருவி மணி​யன் பேசும்​போது, “இந்த மண்​ணில் மீண்​டும் நேர்​மை​யான, தூய்​மை​யான அரசி​யல் நடை​பெற வேண்​டும். அந்த வகை​யில், காம​ராஜர் வழி​யில் தடம் மாறாமல் நடக்​கும் ஜி.கே.​வாசன் பின்​னால் தமிழகம் திரள வேண்​டும் என்பது என் ஆசை” என்​றார்.

விழா​வில், ஜி.கே.​வாசனுக்கு நினைவு பரி​சாக தமாகா மகளிர் அணி சார்​பில் வேலும், தொழிலா​ளர் அணி சார்​பில் கேடய​மும் வழங்​கப்​பட்​டன. சுதந்​திர போராட்ட வீரர் லட்​சுமி​காந்​தன், தமாகா மாநில துணை தலை​வர்​கள் ஏ.எஸ்​.சக்தி வடிவேல், விடியல் சேகர், முனைவர் பாட்​சா, மாநில பொதுச் செய​லா​ளர்​கள் ராஜம் எம்​.பி.​நாதன், ஜி.ஆர்​.வெங்​கடேஷ், பி.ஜவஹர்​பாபு உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x