Published : 17 Jul 2025 05:36 AM
Last Updated : 17 Jul 2025 05:36 AM

பொதுமக்களை ஏமாற்றும் விளம்பர மாடல் திமுக அரசு: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு

சிதம்பரத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.

கடலூர்: ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்டம் நாடகத்​தன​மானது. மக்​களை ஏமாற்​றும் விளம்பர மாடல் அரசு திமுக அரசு என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

சிதம்​பரம், புவனகிரி, காட்​டு மன்​னார்​கோ​வில் பகுதி விவ​சாய சங்​கப் பிரதிநிதிகளுடன், சிதம்​பரத்​தில் நேற்று கலந்​துரை​யாடிய பழனி​சாமி, பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஜெயலலிதா முதல்​வ​ராக இருந்​த​போது வரு​வாய்த் துறை அதி​காரி​கள் ஒவ்​வொரு கிராம​மாகச் சென்று மக்​கள் பிரச்​சினை​களை தீர்த்து வைத்​தனர். எனது தலை​மையி​லான அரசிலும் இது தொடர்ந்தது. இந்த திட்​டத்​துக்கு ஸ்டிக்​கர் ஒட்​டி, ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ என்ற திட்​டத்தை முதல்​வர் விளம்​பரப்​படுத்​துகிறார்.

திமுக எதிர்க்​கட்​சி​யாக இருந்​த​போது, ஸ்டா​லின், உதயநிதி ஆகியோர் தமிழகம் முழு​வதும் சென்று மனுக்​களை வாங்​கி​னார்​கள். கடந்த 4 ஆண்​டு​களில் அவற்​றுக்​குத் தீர்​வு​காண​வில்​லை. ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டத்தை தற்​போது தொடங்​கு​வதன் மூலம், மக்​கள் பிரச்​சினை​கள் தீர்க்​கப்​ப​டா​மல் இருப்​பதை முதல்​வரே ஒப்​புக் ​கொள்​கிறார். மீத​முள்ள 8 மாதங்​களில் என்ன பிரச்​சினையை இவர் தீர்க்​கப் போகிறார்? இதெல்​லாம் நாடகம்.

2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் மக்​களை ஏமாற்​று​வதற்​காக, விளம்பர மாடல் அரசு தனது நாடகத்தை தொடங்​கி​யிருக்​கிறது. ஏற்கெனவே 1 கோடியே 5 லட்​சம் மனுக்​களுக்கு தீர்வு கண்​ட​தாக கூறுகின்​றனர். இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளி​யிட வேண்டும். இது போன்ற திட்​டங்​களை புதிது புதி​தாக கொண்​டு​வந்​து, அரசு இயந்​திரத்தை தவறாக பயன்படுத்​துகின்​றனர்.

கூட்டணியில் பாமக இல்லை: எங்​கள் கூட்​ட​ணி​யில் பாஜக உள்​ளது. இன்​னும் சில கட்​சிகள் உள்​ளன. அதி​முக கூட்​ட​ணி​யில் தற்​போது பாமக இல்​லை. ‘வந்​தா​லும் வரலாம்’ என்​று​தான் கூறினேன். பாஜக​வுடன் நாங்​கள் கூட்​டணி வைப்​பதை விமர்​சிக்​கின்​றனர். ‘கருணாநிதி முதல்​வ​ராக இருந்​த​போது யாருடன் கூட்​டணி வைத்​தார்?’ என்று கேள்வி எழுப்​பினேன்.

அதற்கு இது​வரை பதில் இல்​லை. நான் அமித் ஷாவுடன் பேசி, பாஜக​வுடன் கூட்​டணி வைத்த பின்​னர் ஸ்டா​லினுக்கு பயம் வந்​து விட்​டது. அந்த பயம்​தான் ஸ்டா​லினை இப்​படிப் பேச வைக்​கிறது. திமுக பாஜக​வுடன் கூட்​டணி வைத்​த​போது அது நல்ல கட்​சி, அதிமுக கூட்​டணி வைத்​தால் அது மதவாதக் கட்​சி​யா? இது எந்த வகையில் நியா​யம்? ‘எங்​களது கூட்​டணி ஆட்சி அமைக்​கும்’ என்று அமித் ஷா சொல்​கிறார்.

இதை தவறாக எடுத்​துக் கொள்​ளக் கூடாது. இந்​தக் கூட்​ட​ணிக்கு தமிழகத்​தில் நான்​தான் தலை​மை. நாங்​கள் இரு​வரும் அமர்ந்து பேசி, தெளிவு செய்து கொண்ட விஷ​யம் இது. அதி​முக ஆட்சி அமைக்கும்; நான் முதல்​வர். இதற்கு மேலும் உங்​களுக்கு விளக்கம்தர வேண்​டு​மா? மக்​களிடத்​தில் எழுச்​சி​யைப் பார்க்​கிறேன். திமுக​வின் வீழ்ச்சி தெரி​கிறது.

தெளி​வான எங்​கள் கூட்​டணி வெற்றி பெற்​று, தனிப் பெரும்​பான்​மை​யுடன் ஆட்சி அமைப்​போம். இவ்​வாறு பழனி​சாமி கூறி​னார். முன்​னாள் அமைச்​சர்​கள் ஜெய​பால், செல்வி ராமஜெ​யம், எம்​எல்​ஏ சிதம்​பரம் பாண்​டியன், முன்​னாள் எம்​எல்ஏ முரு​கு​மாறன் உடன் இருந்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x