Published : 17 Jul 2025 04:39 AM
Last Updated : 17 Jul 2025 04:39 AM

ஊரக உள்ளாட்சி பகுதிகளில் கட்டிடங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டால் சீல் வைக்க ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை: ஊரக உள்​ளாட்​சிகளுக்கு உட்​பட்ட பகு​தி​களில் அனு​ம​தி​யின்றி மேற்​கொள்​ளப்​படும் கட்​டு​மானங்​களை பூட்டி சீல் வைக்க வேண்​டும் என்று மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்​சி​யர்​களுக்​கு ஊரக வளர்ச்​சித்​துறை ஆணை​யர் பா.பொன்​னையா அனுப்​பி​யுள்ள கடிதம்: நகர ஊரமைப்பு சட்ட விதி​களின்​படி ஊரகப்​பகு​தி​களில் கட்​டிட வரைபட அனு​மதி வழங்​கப்​படு​கிறது. அங்​கீகரிக்​கப்​ப​டாத கட்​டு​மானங்​களின் மீது எடுக்​கப்பட வேண்​டிய நடவடிக்​கைளும் விளக்​கப்​பட்​டுள்​ளன.

தற்​போது, ஒற்​றைச்​சாளர முறை​யில் இணை​யதளம் வாயி​லாக, கட்​டிட அனு​ம​தியை 3 வகை​களில் வழங்க வழி​ வகைகள் செய்​யப்​பட்​டுள்​ளன. அதன்​படி, சுய​சான்​றின் அடிப்​படை​யில் 2,500 சதுரடி மனை​யில், 3 ஆயிரம் சதுரடி வரை​யில் பரப்​புள்ள குடி​யிருப்பு கட்​டு​மானங்​களை கட்​டிக் கொள்ள அரசு அனு​ம​தி​யளித்​துள்​ளது.

கட்​டிடத்​தின் பரப்பு 10 ஆயிரம் சதுரடிக்​கு​கீழ் இருந்​தால் உள்​ளாட்சி அமைப்​பு​களிடம் இணை​யதளம் மூலம் விண்​ணப்​பிக்க வேண்​டும். இக்​கட்​டிட வரைபடங்​களின் ஆவணங்​கள் உரிய அலு​வலர்​களால் ஆய்வு செய்​யப்​பட்டு அனு​மதி வழங்​கப்​படும். 10 ஆயிரம் சதுரடிக்கு மேற்​பட்ட கட்​டிடங்​களுக்கு தொழில்​நுட்ப அனு​மதி நகர ஊரமைப்பு துறை​யால் பெறப்​பட்டு இறுதி ஒப்​புதல் கிராம ஊராட்​சி​யின் நிர்​வாக அலு​வல​ரால் வழங்​கப்​படு​கிறது.

இவ்​வாறு கட்​டிட வரைபட அனு​மதி பெறப்​பட்டு கட்​டப்​பட்ட கட்​டிடங்​கள் அங்​கீகரிக்​கப்​பட்ட கட்​டிடங்​கள் என்​றும் அனு​மதி பெறாமல் கட்​டப்​பட்ட கட்​டிடங்​கள் அங்​கீகரிக்​கப்​ப​டாத கட்​டிடங்​கள் என்​றும் வரையறை செய்​யப்​படு​கிறது. முறை​யான ஆய்​வுக்கு உட்​ப​டா​மல் வரைபட அனு​ம​தி​யும் பெறாமல் கட்​டப்​படும் அங்​கீகரிக்​கப்​ப​டாத கட்​டிடங்​களின் கட்​டு​மானத்தை நிறுத்த நகர, ஊரமைப்பு சட்​டப்​படி நடவடிக்கை எடுக்க அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

அதன்​படி, கிராம ஊராட்​சிகளின் நிர்​வாக அலு​வலரின் அனு​ம​தி​யின்றி கட்​டு​மானப்​பணி மேற்​கொள்​பவர்​களிடம் இருந்து உரிய நிலம் தொடர்​பான ஆவணங்​கள் மற்​றும் கட்​டிட வரைபட அனு​மதி சான்று கோரி அறி​விப்பு வழங்க வேண்​டும். அனு​ம​தி​யின்றி கட்​டப்​படும் கட்​டு​மானங்​களை நேரடி​யாக கள ஆய்வு செய்​து, ஆய்​வின் போது முழு​மை​யாக கட்​டிடம் கட்​டப்​பட்​டுள்​ள​தா, அல்​லது பணி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறதா என்​பதை அறிய வேண்​டும். கட்​டிட வரைபட அனு​மதி பெறப்​பட்​டுள்​ள​தா, விதி​களை மீறி கட்​டு​மானங்​கள் அமைந்​துள்​ளதா என்​பதை ஆய்வு செய்து முழு விவரத்தை ஆய்​வறிக்​கை​யில் குறிப்​பிட வேண்​டும்.

கட்​டு​மானம் முடிவு பெற்​றிருந்​தால் முடிவறிக்கை உரிய தொழில்​நுட்ப அலு​வலரிடம் பெறப்​பட்​டுள்​ளதா என்​பதை அறிய வேண்​டு்ம். கட்​டிடத்​துக்கு சொத்து வரி விதிக்​கப்​பட்​டுள்​ள​தா, விடு​பட்​டுள்​ள​தா, குடிநீர், மின்​சா​ரம், கழி​வுநீர் வசதி​கள் செய்​யப்​பட்​டுள்​ளதா என்​ப​தை​யும் குறி்ப்​பிட வேண்​டும். அனு​மதி பெறப்​ப​டா​மல் கட்​டு​மானம் நடை​பெற்று வந்​தால் அதை பூட்டி முத்​திரை​யிடும் அதி​காரம் கிராம ஊராட்சி நிர்​வாக அலு​வலருக்கு உண்​டு.

அதை அறிவிக்க வேண்​டும். அறி​விப்பை நேரடி​யாக கட்​டிட உரிமை​யாளர் அல்​லது அவர் குடும்​பத்​தைச் சேர்ந்த வயது வந்த நபரிடம் வழங்க வேண்​டும். அவர்​கள் இரு​வரும் இல்லை என்​றால், அவர் வசிக்​கும் முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்ப வேண்​டும். மேலும், அங்​கீகரிக்​கப்​ப​டாத கட்​டு​மானங்​கள் மீது வழங்​கப்​பட்ட அறிவிக்​கை​யின்​படி, கட்​டு​மானம் நிறுத்​தப்​பட​வில்லை என்​றால், அக்​கட்​டிடத்தை பூட்டி சீல் வைக்​க​வும், உரிய அலு​வலர்​கள் மற்​றும் ஊராட்சி நிர்​வாக அலு​வலர், ஊராட்சி ஆய்​வாளரிடம் அனு​மதி பெற்று நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x