Published : 16 Jul 2025 05:37 AM
Last Updated : 16 Jul 2025 05:37 AM

வீடுவீடாக கதவை தட்டுவதில் எங்களுக்கு கவுரவ குறைச்சல் இல்லை: பழனிசாமிக்கு திமுக வர்த்தகர் அணி செயலாளர் பதில்

சென்னை: மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் பிறந்த நாள் விழா, திமுக செயற்​குழு உறுப்​பினர் க.தன​சேகரன் தலை​மை​யில் சென்னை கே.கே.நகரில் நடை​பெற்​றது. இதில் திமுக வர்த்​தகர் அணி செய​லா​ளர் காசி​முத்​து​மாணிக்​கம் பங்​கேற்​று, பயனாளி​களுக்கு தையல் இயந்​திரம், கிரைண்​டர் உள்​ளிட்ட பொருட்​களை வழங்​கி​னார்.

பின்னர் அவர் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் மட்​டுமே அதி​கம் படித்​தவர்​கள் கேள்வி கேட்​கின்​றனர். அவர்​களை மட்​டம் தட்ட வேண்​டும் என்​ப​தற்​காக பல்​வேறு வகை​களில் முயற்சி நடை​பெறுகிறது. ஆரம்​பத்​தில் இந்தி திணிப்பு அதன்​பின் நீட்​தேர்​வு. இந்தி படிக்​கா​விட்​டால் கல்விக்​கான நிதியை தரமாட்​டோம் என்று மத்​திய பாஜக அரசு கூறுகிறது.

அதை தமிழக அரசு தரும் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறிய​தால், அவர்​கள் கனவு தோல்​வியடைந்​துள்​ளது. இப்​போது கோயில்​கள் மூலம் படிக்​கும் மாணவர்​களின் கல்​வியை தடுக்க பார்க்​கின்​றனர். திருப்​பதி தேவஸ்​தானம், குரு​வாயூரப்​பன் கோயில் சார்​பில் பள்​ளி, கல்​லூரி​கள் நடத்தப்படுகின்றன.

முன்​னாள் முதல்​வர்​கள் பக்​தவத்​சலம், எம்​ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கோயில் நிதி​யில் கல்​லூரி கட்​ட​வில்​லை​யா? தமிழகத்​தில்தற்​போது கோயில்​கள் சார்​பில் 25 பள்​ளி​கள், 9 கலைக் ​கல்​லூரி, ஒரு பாலிடெக்​னிக் கல்​லூரி நடத்​தப்​பட்டு அறிவு தீபம் வளர்க்​கப்​பட்டு வரு​கிறது.

திமுக​வினர் தேர்​தல் வந்​ததும் வீடு​வீ​டாகச் சென்று கதவை தட்​டு​வ​தாக எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி கூறுகிறார். கரோனா காலத்​தில் வீடு​களுக்​குத் தேவை​யான நிவாரணப் பொருட்​களை வழங்க கதவைத் தட்​டிய இயக்​கம் தி​முக. கதவு தட்​டு​வ​தில் எங்​களுக்கு கவுர​வக் குறைச்​சல்​ இல்​லை என்று அவர்​ பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x