Published : 16 Jul 2025 06:22 AM
Last Updated : 16 Jul 2025 06:22 AM

பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணி தொடக்கம்: 13 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர்.

காஞ்​சிபுரம்: பரந்​தூர் பசுமை வெளி விமான நிலை​யத்​துக்கு நிலம் எடுக்​கும் பணி தொடங்​கியதைத் தொடர்ந்து 13 கிராம மக்​கள் ஏகனாபுரம் அம்​பேத்​கர் சிலை முன்பு நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் பல்​வேறு அரசி​யல் கட்​சி​யினர் பங்​கேற்று ஆதரவு தெரி​வித்​தனர்.

பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு நிலம் எடுக்​கும் பணியை மாவட்ட நிர்​வாகம் தொடங்​கி​யுள்​ளது. 19 பேரின் நிலங்​கள் பரந்​தூர் விமான நிலை​யத்​துக்​காக வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த விமான நிலை​யத்​துக்​கான பணி​கள் தீவிரமடைந்​ததைத் தொடர்ந்து, விமான நிலை​யத்​தால் பாதிக்​கப்​படும் 13 கிராமங்​களைச் சேர்ந்த பொது​மக்​கள் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

ஏகனாபுரம் அம்​பேத்​கர் சிலை முன்பு இந்த ஆர்ப்​பாட்​டம் நேற்று நடை​பெற்​றது. ஏகா​னாபுரம் உள்​ளிட்ட கிராமங்​கள் முழு​மை​யாக கையகப்​படுத்​தப்பட உள்​ள​தால் அந்த கிராம மக்​கள் அதி​கள​வில் பங்​கேற்​றனர். மற்ற கிராமங்​களில் இருந்து குறைந்த அளவு பொது​மக்​களே போராட்​டத்​தில் பங்​கேற்​றனர்.

இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் தமிழக அரசை​யும், மாவட்ட நிர்​வாகத்​தை​யும் கண்​டித்து பலர் பேசினர். இந்த ஆர்ப்​பாட்​ட​தில் தமிழக வெற்​றிக் கழகம், நாம் தமிழர் கட்​சி, விசிக உள்பட பல்​வேறு கட்சியினர் பங்​கேற்​றனர். விமான நிலைய திட்​டத்தை கைவிடக் கோரி தமிழக வெற்​றிக் கழகத் தலை​வர் விஜய் தலை​மை​யில் தலை​மைச் செயல​கத்தை முற்​றுகை​யிட உள்​ள​தாக போராட்​டக் குழு​வினர் தெரி​வித்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x