Published : 16 Jul 2025 05:55 AM
Last Updated : 16 Jul 2025 05:55 AM

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு தீ விபத்து: ரயில் ஓட்டுநர் உட்பட 16 பேரிடம் விசாரணை

சென்னை: ​திரு​வள்​ளூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு தீ விபத்து ஏற்​பட்​டது குறித்து ரயில் ஓட்​டுநர், நிலைய அதி​காரி உட்பட 16 பேரிடம் சென்னை ரயில்வே கோட்ட அலு​வல​கத்​தில் நேற்று விசா​ரணை தொடங்​கியது. திரு​வள்​ளூர் ரயில் நிலை​யம் அருகே பெட்​ரோல், டீசல் நிரப்​பிக் கொண்டு 52 பெட்​டிகளு​டன் சென்ற சரக்கு ரயில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை அதி​காலை தடம்​புரண்டு விபத்​துக்​குள்​ளானது.

இதனால் பயங்கர தீ விபத்து ஏற்​பட்​டு, அடுத்​தடுத்து 18 டேங்​கர்​கள் எரிந்து நாச​மாகின. இதனால் சென்னை சென்ட்​ரல் - அரக்​கோணம் மார்க்​கத்​தில் ரயில் சேவை பாதிக்​கப்​பட்​டது. சேதமடைந்த ரயில் தண்​ட​வாளம், உயர்​நிலை மின்​பாதை, மின்​கம்​பங்​கள் ஆகியவை அடுத்த 2 நாட்​களில் முழு​மை​யாக சீரமைக்​கப்​பட்​டன. இந்த ​பாதைகளில் மின்​சார, விரைவு ரயில்​கள் தற்​போது வழக்​கம்​போல இயங்​கு​கின்​றன.

இந்த விபத்து குறித்து விசா​ரித்து அறிக்கை சமர்ப்​பிக்க ஒருங்​கிணைப்​பாளர் நிதின் நோர்​பர்ட் உட்பட 4 பேர் கொண்ட குழுவை தெற்கு ரயில்வே அமைத்​திருந்​தது. இக்​குழு​வின் முன் விசா​ரணைக்கு ஆஜராக 16 பேருக்கு நேற்று முன்​தினம் அழைப்​பு விடுக்கப்பட்​டது. இந்​நிலை​யில், சென்னை ரயில்வே கோட்​டத்​தில் பாது​காப்​புத் துறை அலு​வல​கத்​தில் இவர்​களிடம் நேற்று விசா​ரணை தொடங்​கியது.

சரக்கு ரயில் ஓட்​டுநர், உதவி ஓட்​டுநர், மங்​களூர் - சென்​னைக்கு இயக்​கப்​பட்ட விரைவு ரயில் ஓட்​டுநர், திரு​வள்​ளூர் நிலை​யத்​தின் நிலைய அதி​காரி, பாய்ன்ட் மேன், அந்த நேரத்​தில் பணி​யில் இருந்த ஆர்​பிஎஃப் போலீ​ஸார், சிக்​னல் மேற்​பார்​வை​யாளர், கச்சா எண்​ணெய் அனுப்​பிய எண்​ணெய் நிறுவன வணிக மேற்​பார்​வை​யாளர் உட்பட 16 பேரிடம் 2 நாட்​கள் விசா​ரணை மேற்கொள்ளப்பட​ உள்​ளது.

எதிர்​காலத்​தில் இது​போன்ற அசம்​பா​விதம் நடை​பெறாமல் தடுக்க மேற்​கொள்ள வேண்​டிய நடவடிக்கை ஆகிய​வற்​றுடன் அறிக்கை தெற்கு ரயில்வே பொது​மேலா​ளர் ஆர்​.என்​.சிங்​கிடம் சமர்ப்​பிக்​கப்பட உள்​ள​தாக ரயில்​வே தரப்​பில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x