Published : 16 Jul 2025 09:04 AM
Last Updated : 16 Jul 2025 09:04 AM

மகனால் தான் மா.செ பதவியை பறிகொடுத்தாரா கல்யாணசுந்தரம்? - தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சலசலப்பு!

மக்களைத் தேடி கழகத்தினரைப் போகச் சொல்லிவிட்டு இன்னொரு பக்கம், கட்சிக்கும் ஆட்சிக்கும் தொல்லையாக இருக்கும் நிர்வாகிகளை களையெடுக்கும் வேலைகளையும் வேகப்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அப்படித்தான் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த மாநிலங்களவை எம்பி-யான கல்யாணசுந்தரத்தை கழற்றிவிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

அண்​மைக்​கால​மாக பொது இடங்​களில், ‘பொன்​முடி ஸ்டைலில்’ எடக்கு மடக்​காக பேசி எரிச்​சலை உண்​டாக்​கி​னார் பெரிய​வர் கல்​யாணசுந்​தரம். இது சமூக ஊடகங்​களில் வைரலாகி சர்ச்​சை​யான நிலை​யில், கல்​யாணசுந்​தரத்​தால் அழுத்​திவைக்​கப்​பட்ட தஞ்சை வடக்கு மாவட்ட திமுக நிர்​வாகி​கள் சிலர் அண்​மை​யில் அறி​வால​யத்​துக்கே சென்று கல்​யாணசுந்​தரம் மற்​றும் ஒன்​றியச் செய​லா​ள​ராக இருக்​கும் அவரது மகன் முத்​துச்​செல்​வத்​துக்கு எதி​ராக தங்​களது மனக்​கு​முறலைக் கொட்​டி​விட்டு வந்​த​தாகச் சொல்​கி​றார்​கள்.

இது தொடர்​பாக நம்​மிடம் பேசிய தஞ்சை வடக்கு மாவட்ட திமுக-​வினர் சிலர், “தி​முக ஆட்​சிக்கு வந்​த​தில் இருந்தே கல்​யாணசுந்​தரத்​தின் மகன் முத்​துச்​செல்​வன் அதி​காரம் பண்ண ஆரம்​பித்து விட்​டார். மாவட்ட ஊராட்​சிக் குழு துணைத் தலை​வ​ராக​வும் தேர்​வுசெய்​யப்​பட்ட அவர், ஒரு​கட்​டத்​தில் தனது தந்​தை​யின் ஆதர​வாளர்​களையே ஒதுக்க ஆரம்​பித்​தார்.

வடக்கு மாவட்​டத்​திற்​குள் வரும் டாஸ்​மாக் கடைகளில் முத்​துச்​செல்​வனின் பெயரைச் சொல்லி பகிரங்​க​மாகவே வசூல் நடந்​தது. ஒப்​பந்​தப்​பணி​களில் 18 சதவீதம் வரைக்​கும் கட்​டிங் கேட்​ட​தால் ஒப்​பந்​த​தா​ரர்​கள் தெறித்து ஓடி​னார்​கள். கடந்த தேர்​தலில் திமுக கூட்​ட​ணிக்கு எதி​ராக வேலை பார்த்த காண்ட்​ராக்​டர் ஒரு​வ​ருக்கு காண்ட்​ராக்ட் கொடுக்​கக் கூடாது என திமுக-​வினர் சொன்​னதை​யும் காதில் வாங்​கிக் கொள்​ளாமல், கமிஷனுக்​காக ரோடு காண்ட்​ராக்டை அவருக்கே தூக்​கிக் கொடுத்​தார் முத்​துச்​செல்​வன்.

கும்​பகோணத்​தில் முன்​னாள் அதி​முக அமைச்​சர் ஒரு​வரின் மகனால் நடத்​தப்​படும் ‘மனமகிழ் மன்ற’ கிளப்​புக்கு முத்​துச்​செல்​வனின் அனுசரணை​யும் இருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள். காண்ட்​ராக்ட் விஷ​யங்​கள் மட்​டுமல்​லாது, அரசு அதி​காரி​கள் டிரான்​ஸ்ஃபர் விஷ​யங்​களி​லும் முத்​துச்​செல்​வன் லகரங்​களில் பேச்​சு​வார்த்தை நடத்தி முடித்​திருக்​கி​றார். ஆனால், இப்​படி​யெல்​லாம் தன்னை வளப்​படுத்​திக் கொண்​டாலும் கட்​சி​யினர் யாருக்​கும் எது​வும் செய்​த​தாகத் தெரிய​வில்​லை. யாராவது எதிர்​பார்ப்​புடன் வந்​தால் அவர்​களை ஏதாவது காரணம் சொல்லி ஒதுக்​கி​வைத்​து​விடு​வார்.

2022-ல், கும்​பகோணத்​தில் கலைஞர் நூற்​றாண்டு நினைவு அறி​வால​யம் கட்​டு​மானப் பணி​களை கல்​யாணசுந்​தரம் தொடங்​கி​னார். வருடம் மூன்​றாகி​யும் இன்​ன​மும் அந்​தப் பணி​களை முடிக்​க​வில்​லை. இதற்​காக திரட்​டப்​பட்ட தொகை​யை​யும் தன் பொறுப்​பிலேயே வைத்​துக் கொண்​ட​வர், கட்​டிடப் பணி​களை முடித்​தால் எங்கே தனது பதவியை பறித்​து​விடு​வார்​களோ என்ற பயத்​தில் முடிக்​காமல் வைத்​திருந்த​தாகச் சொல்​கி​றார்​கள்.

இதையெல்​லாம் இத்​தனை நாளும் சகித்​துக் கொண்​டிருந்த வடக்கு மாவட்ட நிர்​வாகி​கள் சிலர் பொறுமை இழந்து தான் தலை​மைக்​குப் போய் புகார் சொல்லி இருக்​கி​றார்​கள். அப்​பா​வும் மகனும் நடத்​தும் அதிரடி அரசி​ய​லால் கடந்த 4 ஆண்​டு​களாக தாங்​கள் மிக​வும் வேதனைப்​பட்​டுக் கிடப்​ப​தாகச் சொன்ன அந்த நிர்​வாகி​கள், ‘அதி​முக ஆட்​சி​யில் இருந்​ததை விட மிக​வும் மோச​மாக நடத்​தப்​படு​கி​றோம். 2026 தேர்​தலுக்​காக கட்சி தலைமை பணம் தந்​தால் கூட அது கீழ்​மட்​டம் வரைக்​கும் சென்று சேருமா என்று தெரி​யாது’ எனச் சொல்​லி​விட்டு வந்​திருக்​கி​றார்​கள்” என்​றார்​கள்.

நிர்​வாகி​களின் புகாரை அடுத்து கல்​யாணசுந்​தரத்தை அழைத்து விசா​ரணை நடத்​திய திமுக தலை​மை, “ஒன்​றும் பிரச்​சினை இல்​லை... நீங்​கள் போய் வழக்​கம் போல கட்சி வேலை​களைப் பாருங்​கள்” என்று சொல்லி அவரை அனுப்​பி​விட்​டு, பென் அமைப்பு மூல​மாக​வும், உளவுத்​துறை மூல​மாக​வும் புகார்​கள் தொடர்​பாக ரகசிய விசா​ரணை நடத்​தி​ய​தாகச் சொல்​லப்​படு​கிறது. இந்த விசா​ரணை​யின் அடிப்​படை​யிலேயே கல்​யாணசுந்​தரத்​தின் மாவட்​டச் செய​லா​ளர் பதவி பறிக்​கப்​பட்​டுள்​ளது. அடுத்​தகட்​ட​மாக முத்​துச்​செல்​வனின் ஒன்​றியச் செய​லா​ளர் பதவிக்​கும் ஆபத்து வந்​தா​லும் ஆச்​சரியமில்லை என்​கி​றார்​கள்.

தொடர்ந்து மூன்​றாவது முறை​யாக எம்​எல்​ஏ-​வாக இருக்​கும் தஞ்​சையைச் சேர்ந்த கோவி.செழியனை அண்​மை​யில் அமைச்​சர​வைக்​குள் சேர்த்​தார் ஸ்டா​லின். அதே​போல் தொடர்ந்து மூன்​றாவது முறை​யாக கும்​பகோணம் எம்​எல்​ஏ-​வாக இருக்​கும் சாக்கோட்டை அன்​பழ​க​னுக்கு தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செய​லா​ளர் பொறுப்பை இப்​போது வழங்கி இருக்​கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x