Published : 16 Jul 2025 04:44 AM
Last Updated : 16 Jul 2025 04:44 AM

காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா: ஆளுநர் ஆர்​.என்​.ரவி, முதல்வர் ஸ்டா​லின், தலைவர்கள் மரியாதை

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்ட காமராஜரின் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அரசு உயர் அலுவலர்கள்.

சென்னை: ​காம​ராஜரின் 123-வது பிறந்​த​நாளை​யொட்டி தமிழக ஆளுநர், முதல்​வர் மற்​றும் அரசி​யல் தலை​வர்​கள் மரி​யாதை செலுத்​தினர். மறைந்த தமிழக முன்​னாள் முதல்​வர் காம​ராஜரின் 123-வது பிறந்த தினம் நேற்று தமிழக அரசின் சார்​பிலும், அரசி​யல் கட்​சிகள் சார்​பிலும் உற்​சாக​மாக கொண்​டாடப்​பட்​டது.

சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்​தில் உள்ள காம​ராஜர் நினைவு இல்​லத்​தில் அலங்​கரித்து வைக்​கப்​பட்ட காம​ராஜரின் படத்​துக்கு தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ரவி மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார். தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சிதம்​பரம் அரசு மகளிர் மேல்​நிலைப்​பள்​ளி​யில் காம​ராஜரின் படத்​துக்கு மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

காமராஜரின் 123-வது பிறந்த நாளையொட்டி,
காமராஜர் மண்டபத்தில் அவரது படத்துக்கு
ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழக அரசின் சார்​பில் அமைச்​சர்கள் பி.கே.சேகர்​பாபு, அனிதா ஆர்​.​ரா​தாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை அண்​ணா​சாலை பல்​ல​வன் இல்​லம் அரு​கே​யுள்ள காம​ராஜர் சிலைக்கு மலர் தூவி மரி​யாதை செலுத்​தினர். அதி​முக பொதுச்​செய​லா​ள​ரும், எதிர்க்​கட்சி தலை​வரு​மான பழனி​சாமி அரியலூரில் காம​ராஜரின் படத்​துக்கு மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் மலர் தூவி மரியாதை
செலுத்திய பொதுச் செயலாளர் பிரேமலதா.

சென்னை தி.நகர், திரு​மலை பிள்ளை சாலை​யில் அமைந்​துள்ள காம​ராஜர் நினைவு இல்​லத்​தில் உள்ள அவரது உரு​வச் சிலைக்கு தமிழக காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் கே.​வி.தங்​க​பாலு, பெருந்​தலை​வர் மக்​கள்கட்சி தலை​வர் என்​.ஆர்​.தன​பாலன் மாலை அணிவித்து மரி​யாதை செலுத்​தினர்.

சென்னை அண்ணா சாலை ஜிம்கானா கிளப் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்
செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் அடுத்தடுத்து மாலை
அணிவித்து மறியாதை செலுத்தினர். | படங்கள்: ம.பிரபு |

அண்​ணாசாலை ஜிம்​கானா கிளப் எதிரே உள்ள காம​ராஜரின் சிலைக்கு தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் ஆகியோர் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர். கோயம்​பேட்​டில் உள்ள தேமு​திக கட்​சி​யின் தலைமை அலு​வல​கத்​தில் பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா, பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்​சி​யின் தலை​வர் விஜய் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார்.

அரியலூரில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்துக்கு
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

முதல்​வர் ஸ்டா​லின்: அன்று பள்​ளி​களில் இட்​டது மதிய உணவல்ல; நூற்​றாண்​டுக் கல்விக் கனவுக்​கான அடித்​தளம், நல்​ல​ வேளை, “பள்​ளி​யில் கல்​வி​தான் கொடுக்க வேண்​டும்; சோறு போட அது என்ன ஹோட்​டலா” என்று அதி​மே​தா​வி​யாய்ப் பேசும் அறி​வுக்​கொழுந்​துகள் இல்லை அன்​று. அதனால்​தான், எத்​தனை நன்மை தமிழகத்​துக்கு இன்​று. கல்விக் கண் திறந்த பெருந்​தலை​வர் காம​ராஜருக்​குப் புகழ் வணக்​கம்.

துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின்: காம​ராஜர் கண்ட கல்விக் கனவு​களை, புது​மைப்​பெண், தமிழ்ப்​புதல்​வன், நான் முதல்வன் போன்ற திட்​டங்​களின் வழியே நனவாக்கி வரு​கிறது நம் திரா​விட மாடல் அரசு.

முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம்: பேச்சை குறை செயலை அதி​க​மாக்கு என்ற தத்​து​வத்தை கடைபிடித்து தன்​னலமற்ற தன்​மைக்கு எடுத்​துக்​காட்​டாக திகழ்ந்​தவர் காம​ராஜர்.

பாமக தலை​வர் அன்​புமணி: தமிழகத்​தில், கல்​விப்​புரட்​சி, தொழில் புரட்​சி, வேளாண்​புரட்சி ஆகிய அனைத்​துக்​கும் வித்திட்டவர். அறி​வுப்​பசியை அணைக்க வயிற்​றுப்​பசி தடை​யாக இருக்​கக்​கூ​டாது என்​ப​தற்​காக மதிய உணவுத் திட்​டத்தை அறி​முகம் செய்த மகான் காம​ராஜர்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: தனக்​குக் கிடைத்த பதவி​கள் அனைத்​தை​யும் சேவை செய்​வதற்​கான வாய்ப்​பாகக் கருதி கல்​வி, விவ​சா​யம், சுகா​தா​ரம் மற்​றும் தொழில்​துறை​யில் மாபெரும் புரட்​சியை ஏற்​படுத்​தி​ய​வர் காம​ராஜர்.

மக்​கள் நீதி மய்யம் கட்சி தலை​வர் கமல்​: லட்​சி​ய​வாத அரசி​யலுக்கு முன்​னு​தா​ரண​மாகத் திகழ்ந்​தவர் பெருந்​தலை​வர் காமராஜர். அரசி​யல் மாண்​புக்​கும் நிர்​வாக ஆளு​மைக்​கும் இக்​காலத்​தி​லும் சான்​றாக நிற்​கிறார்.

தவெக தலை​வர் விஜய்: பெருந்​தலை​வர் காம​ராஜர் தமது ஆட்​சி​யில் மதத்​சார்​பின்​மை​யை​யும், நிர்​வாகத்​தில் நேர்​மை​யை​யும், கடைபிடித்​தவர். சமூகநீதி கொள்கை வழி​யில் எளிய​வர்​களுக்​கும் அதி​காரம் அளித்து தமிழகத்தை முன்​னேற்​றப் பாதை​யில் கொண்​டு​சென்றவர்.

தி​ரா​விடர் கழகத் தலை​வர் கி.வீரமணி: தமிழகத்​தின் கல்வி வளர்ச்​சி​யைத் தடுக்​கும் நவீன வருணாசிரம வாரிசுகளுக்கு இடம் தராமல், தமிழ் மண்​ணைக் காப்​பாற்​ற, ஓர்​ அணி​யில்​ திரண்​டு, தமிழக கல்​விப்​ புரட்​சி யுகத்​தைத்​ தடை​யின்​றித்​ தொடருவோம்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x