Published : 15 Jul 2025 05:20 AM
Last Updated : 15 Jul 2025 05:20 AM

எஸ்சி மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்​தில் உள்ள ஆதி​தி​ரா​விடர் மாணவர் விடு​தி​களில் அடிப்​படை வசதி​களை போர்க்​கால அடிப்​படை​யில் மேம்படுத்த வேண்​டும் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் வலி​யுறுத்தி உள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: திரா​விட மாடல் ஆட்​சி​யில், பட்​டியலின மக்​கள் படும் துன்​பங்​கள் ஒன்றா இரண்​டா? எதற்​கு​தான் இது​வரை தீர்வு கிடைத்​துள்​ளது? தமிழகத்​தில் 445 கிராமங்​களில் தீண்​டா​மைக் கொடுமை நில​வுவ​தாக அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளது. ‘காலனி’ என்ற சொல்லை நீக்​கப் போவ​தாக கூறி முதல்​வர் ஒரு நாடகம் நடத்​தி​னார். இப்​போது சமூக நீதி விடுதி நாடகம் நடத்​துகிறார்.

பள்ளி மற்​றும் கல்​லூரி மாணவர்​களுக்கு விதி​களின்​படி, உணவுப்​படி வழங்க வேண்​டும். இதுத​விர பண்​டிகை காலங்​களில் சிறப்பு உணவு வழங்க சிறப்பு நிதி​யும், சோப்​பு, எண்​ணெய் போன்ற தினசரி பயன்​படுத்​தும் பொருட்​கள் வாங்​கு​வதற்கு மாதம்​தோறும் நிதியும் வழங்க வேண்​டும். ஆனால் நிலைமை என்ன? தமிழகத்​தில் உள்ள விடு​தி​களில் எந்த ஒரு அடிப்​படை வசதி​யும் கிடை​யாது.

விடுதி வசதி சரி​யாக இல்லை என பட்​டியலின பழங்​குடி​யின மாணவ, மாண​வியர் சாலைக்கு வந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். மத்​திய அரசிடம் இருந்து பட்​டியலின மக்​களுக்கு வரும் மத்​திய நிதி​யை, ஆதி திரா​விடர் நலத்​துறைக்கு முழு​மை​யாகப் பயன்​படுத்​தாமல் ஒவ்​வொரு ஆண்​டும் பெரும்​பாலான நிதி திருப்பி அனுப்​பப்​படு​கிறது.

எனவே, தமிழகம் முழு​வதும் சிறப்​புக் குழு அமைத்​து, ஆதி​தி​ரா​விட மாணவ, மாணவி​களின் விடு​தி​களில் போர்க்​கால அடிப்​படையில் ஆய்​வு​கள் மேற்​கொண்​டு, உணவு, சுகா​தா​ரம் மற்​றும் அடிப்​படை வசதி​களை தமிழக அரசு மேம்​படுத்த வேண்​டும்​.
இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x