Published : 15 Jul 2025 05:14 AM
Last Updated : 15 Jul 2025 05:14 AM

வன்னியர் இடஒதுக்கீடு கோரி 20-ல் விழுப்புரத்தில் போராட்டம்: அன்புமணி அறிவிப்பு

சென்னை: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் வரும் 20-ம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்போவதாகவும் அதில் பெருந்திரளாக பங்கேற்குமாறும் தொண்டர்களுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் எழு​தி​யுள்ள கடிதம்: தமிழகத்​தில் உழைக்​கும் வர்க்​க​மான வன்​னிய மக்​களுக்கு துரோகம் இழைக்​கும் வரலாற்​றில் சமூக அநீதி அரசாக திமுக அரசு உள்ளது. வன்​னியர்​களுக்கு உள் இட ஒதுக்​கீடு வழங்க வேண்​டும் என்று உச்​சநீ​தி​மன்​றம் ஆணை​யிட்டு 1200 நாள்​களாகும் நிலை​யில், இது​வரை நிறைவேற்​ற​வில்​லை.

இரண்​டாவ​தாக, வன்​னியர் இட ஒதுக்​கீடு குறித்து பரிந்​துரைக்க தமிழ்​நாடு பிற்​படுத்​தப்​பட்​டோர் ஆணை​யத்​துக்கு வழங்​கப்​பட்ட 30 மாதக்​கெடு நிறைவடைந்து விட்ட நிலை​யில், ஆணை​யத்​திட​மிருந்து அறிக்கை பெறு​வதற்கு பதிலாக காலநீட்​டிப்பு வழங்கி துரோகம் செய்​திருக்​கிறது.

திமுக அரசின் சமூக அநீ​தியை அம்​பலப்​படுத்​து​வதன் மூல​மாக​வும், ராம​தாஸ் வழி​காட்​டு​தல்​களில் கடந்த காலங்​களில் நடத்தப்பட்​டது போன்ற தீவிர​மான அறப்​போ​ராட்​டங்​களை முன்​னெடுப்​ப​தன் மூல​மாக​வும் தான் வன்னியர்களுக்​கான இட ஒதுக்கீட்டை வென்​றெடுக்க முடி​யும் என்​றும் பாமக கருதுகிறது.

அதன் தொடக்​க​மாக தான் வன்​னியர் சங்​கம் நிறு​வப்​பட்ட நாளான ஜூலை 20-ம் தேதி, இட ஒதுக்​கீட்​டுக்​காக போராளி​கள் இன்னுயிர் ஈந்த மண்​ணான விழுப்​புரத்​தில் மாபெரும் மக்​கள்​திரள் போராட்​டத்தை நடத்த தீர்​மானித்​திருக்​கிறோம். அந்த வகையில் இப்​போதும் நமக்​கான சமூகநீ​தியை வென்​றெடுக்​க​வும், அதனடிப்​படை​யில் பிற சமூகங்​களுக்​கும் உரிய இட ஒதுக்​கீடு கிடைப்​பதை உறுதி செய்​ய​வும் இந்த போராட்​டம் தான் காரண​மாக அமைய​விருக்​கிறது.

இதை மனதில் கொண்டு பாமக, வன்​னியர் சங்​கம் உள்​ளிட்ட அதன் இணை மற்​றும் சார்பு அமைப்​பு​களைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்​வாகி​களும், பாட்​டாளி தொண்​டர்​களும் விழுப்​புரம் மண்​ணில் படை திரள்​வோம், திமுக​வின் துரோகத்தை தோலுரித்துகாட்டி நமக்​கான சமூகநீ​தியை வென்​றெடுப்​போம் என்று உங்​களை அழைக்​கிறேன்.

வன்​னிய மக்​களின் சமூக நீதிக்காக எந்த தியாகத்​தை​யும் செய்​யத் தயா​ராக, பாட்​டாளி சொந்​தங்​களாகிய உங்​களை எதிர்​பார்த்து விழுப்​புரத்​தில் காத்​திருப்​பேன்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x