Published : 14 Jul 2025 05:47 AM
Last Updated : 14 Jul 2025 05:47 AM

ஜூலை 24-ம் தேதி முதல் 36 தொகு​திகளில் இபிஎஸ் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்

சென்னை: அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி 2-ம் கட்ட பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை ஜூலை 24-ம் தேதி தொடங்​கி, 36 தொகு​தி​களுக்கு செல்​கிறார். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, 2026 தேர்​தலை முன்​னிட்டு பல்​வேறு பகு​தி​களில் உள்ள நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​கள் மற்​றும் திமுக அரசை கண்​டித்து அதி​முக ஆர்ப்​பாட்​டங்​களை அறி​வித்து வரு​கிறது.

இதனிடையே “மக்​களை காப்​போம்: தமிழகத்தை மீட்​போம்” என்ற தலைப்பில் கடந்த ஜூலை 7-ம் தேதி முதல்​கட்ட பிரச்​சார சுற்றுப்​பயணத்தை பழனி​சாமி கோவை​யில் தொடங்​கி​னார். தொகு​தி​வாரி​யாக பிரச்​சா​ரம் செய்​து​வரும் நிலை​யில், செல்​லும் வழிகளில், ஆங்​காங்கே அதிக அளவில் ஒரே தொழிலை செய்​யும் நெச​வாளர்​கள், விவ​சா​யிகள், குறு, சிறு, நடுத்தர தொழில் செய்​வோர் உள்​ளிட்​டோரை சந்​தித்​து, அவர்​களின் குறை​களை கேட்டு வரு​கிறார்.

சில தொகு​தி​களில் 2026-ல் அதி​முக ஆட்சி அமைந்​ததும், அனை​வருக்​கும் தீர்வு கிடைக்​கும் என உறு​தி​யளித்து வரு​கிறார். சில தொகு​தி​களில் சாலை வலம் சென்​று, மக்​களை சந்​திக்​கிறார். இவரது முதற்​கட்ட பிரச்​சா​ரம் வரும் ஜூலை 21-ம் தேதி​யுடன் முடிவடைகிறது. இதில் அவர் மொத்​தம் 33 தொகு​தி​களில் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார்.

இந்​நிலை​யில் வரும் 24-ம் தேதி, 2-ம்​கட்ட பிரச்​சா​ரத்தை தொடங்க உள்​ளார். இதுதொடர்​பாக அதி​முக தலைமை அலு​வல​கம் வெளியிட்ட அறிக்​கை: அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி 2-ம்​கட்ட பிரச்​சார பயணத்தை ஜூலை 24-ம் தேதி தொடங்​கி, ஆக.8-ம் தேதி நிறைவு செய்ய உள்​ளார். இதன்​படி, 24-ம் தேதி புதுக்​கோட்டை மாவட்​டத்​துக்கு உட்​பட்ட கந்​தர்​வக்​கோட்​டை, ஆலங்குடி, அறந்​தாங்கி தொகு​தி​களி​லும், 25-ம் தேதி விராலிமலை, புதுக்​கோட்​டை, திரு​ம​யம் தொகு​தி​களி​லும், 26-ம் தேதி சிவகங்கை மாவட்​டம் காரைக்​குடி, திருப்​பத்​தூர், சிவகங்கை தொகு​தி​களி​லும், 30-ம் தேதி மானாமதுரை, ராம​நாத​புரம் மாவட்​டம் பரமக்​குடி, திரு​வாடணை ஆகிய தொகு​தி​களி​லும், 31-ம் தேதி ராம​நாத​புரம், முதுகுளத்​தூர், தூத்​துக்​குடி மாவட்​டம் விளாத்​தி​குளம் ஆகிய தொகு​தி​களி​லும் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள உள்​ளார்.

அதே​போல் ஆக.1-ம் தேதி தூத்​துக்​குடி மாவட்​டம் கோவில்​பட்​டி, ஓட்​டப்​பி​டாரம், தூத்​துக்​குடி, 2-ம் தேதி திருச்​செந்​தூர், வை​குண்டம், திருநெல்​வேலி மாவட்​டம் ராதாபுரம், 4-ம் தேதி திருநெல்​வேலி மாவட்​டம் பாளை​யங்​கோட்​டை, திருநெல்​வேலி, 5-ம் தேதி அம்​பாச​முத்​திரம், தென்​காசி மாவட்​டம் ஆலங்​குளம், தென்​காசி தொகு​தி​களில் பயணம் மேற்​கொள்​கிறார்.

இதைத்​தொடர்ந்து 6-ம் தேதி தென்​காசி மாவட்​டம் கடையநல்​லூர், வாசுதேவநல்​லூர், சங்​கரன்​கோ​வில், விருதுநகர் மாவட்​டம் ராஜ​பாளை​யம், ஸ்ரீவில்​லிபுத்​தூர், சிவ​காசி, 8-ம் தேதி சாத்​தூர், விருதுநகர், அருப்​புக்​கோட்டை ஆகிய தொகு​தி​களில் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள உள்​ளார். 2-ம்​கட்ட பிரச்​சா​ரத்​தில் மொத்​தம் 36 தொகு​தி​களில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு பிரச்​சா​ரம்​ செய்​ய உள்​ளார்​. இவ்​வாறு அறிக்​கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x