Published : 14 Jul 2025 06:29 AM
Last Updated : 14 Jul 2025 06:29 AM

மின்வாரியத்தில் மாற்றுத் திறனாளிகள் பதவி உயர்வில் சலுகை அறிவிப்பு

சென்னை: ​காது கேளாத, வாய் பேச முடி​யாத மாற்​றுத் திற​னாளி​களுக்கு பதவி உயர்​வில் மொழி திறன் தேர்ச்​சி​யில் இருந்து மின் வாரி​யம் விலக்கு அளித்​துள்​ளது. தமிழகத்​தில் அரசு பணி​யில் உள்​ளவர்​கள் தமிழ் மொழி அறிந்​தவர்​களாக இருக்க வேண்​டும் என்பது விதி. தற்​போது டிஎன்​பிஎஸ்சி மூலம் நடத்​தப்​படும் தேர்​வு​களில் தமிழ் மொழி தாள் இடம்​பெற்​றுள்​ளது.

அதில் தேர்ச்சி பெற்றால்​தான் அடுத்​தகட்ட தேர்வு நடை​முறைக்​குச் செல்ல முடி​யும். ஆனால் டிஎன்​பிஎஸ்​சி-க்கு முன் பணி​யில் சேர்ந்​தவர்​களுக்கு பதவி உயர்வு வழங்​கும்​போது தமிழ் மொழி தேர்​வில் தேர்ச்சி பெற்ற சான்​றிதழை சமர்​பிக்க வேண்​டும்.

தமிழக அரசு பணி​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்கு 4 சதவீதம் இடஒதுக்​கீடு உள்​ள​தால், அனைத்து அரசு துறை​களி​லும் மாற்றுத்திற​னாளி​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். இதில் காது கேளாத, வாய் பேச முடி​யாத மாற்​றுத் திற​னாளி​களும் உள்ள நிலையில் அவர்​களால் தமிழ் மொழிக்​கான எழுத்​துத் தேர்​வில் பங்​கேற்க முடி​யும், ஆனால் நேர்​முகத் தேர்​வில் பங்​கேற்க முடி​யாது, எனவே இவர்​களுக்கு தமிழ் மொழி​திறன் தேர்​வில் இருந்து விலக்கு அளிக்க வேண்​டும் என கோரிக்​கை எழுந்​தது.

இந்​நிலை​யில் மின்​வாரி​யத்​தில் தற்​போது பணி​யில் உள்ள காது கேளாத, வாய்​பேச முடி​யாத மாற்​றுத் திற​னாளி​களுக்கு தமிழ் மொழி தேர்வு சான்​றிதழ் இல்​லாமல் பதவி உயர்வு வழங்க உத்​தர​விடப்பட்​டுள்​ளது. மேலும் அனைத்து மின்​பகிர்​மான வட்​டங்​களில் பணி​யாற்​றும் மாற்​றுத்​திறன் பணி​யாளர்​களின் தகவல்​களை சேகரித்து அனுப்​பு​மாறு அனைத்து முதன்மை பொறி​யாளர்​கள் மற்றும் மேற்​பார்வை பொறி​யாளார்​களுக்கு உத்​தர​வு பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x