Published : 14 Jul 2025 05:15 AM
Last Updated : 14 Jul 2025 05:15 AM

கடந்த தேர்தலைவிட இரண்டு மடங்கு தொகுதிகளை எதிர்பார்க்கும் விசிக

சென்னை: கடந்த தேர்​தலைவிட இரண்டு மடங்கு தொகு​தி​களை பெறு​வ​தில் விசிக உறு​தி​யாக இருப்​ப​தாக கட்சி வட்​டாரத்​தினர் கூறுகின்​றனர். கடந்த 2021-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்ற விசிக 6 தொகுதிகளில் போட்​டி​யிட்டு 4 தொகு​தி​யில் வெற்றி பெற்​றது. இதைத் தொடர்ந்​து, நடை​பெற்ற மக்​கள​வைத் தேர்​தலில் 2 தனித்தொகு​தி, 1 பொதுத்​தொகு​திக்​காக கடுமை​யாக போ​ராடியது.

ஆனால், 2 தொகு​தி​களை மட்​டுமே திமுக ஒதுக்​கிய நிலை​யில், இரண்​டிலும் சொந்த சின்​னத் தில் போட்​டி​யிட்டு மாநில கட்சி என்னும் அங்​கீ​காரத்​தை​யும் பெற்​றது. இந்த அங்​கீ​காரத்தை தக்க வைக்க வேண்​டிய நிலை​யில் விசிக உள்​ளது. இதற்​காக குறைந்த​பட்​சம் 8 தொகு​தி​களில் வெற்றி பெற வேண்​டும். அப்​படி​யா​னால் இரட்டை இலக்​கத் தொகு​தி​யில் போட்​டி​யிடு​வது அவசியம்.

அந்த வகை​யில் விசிக​வின் வளர்ச்​சியை முன்​வைத்து திமுக​விடம் தொகு​தியை கேட்​டுப் பெறு​வதற்​கான திட்​டங்​கள் வகுக்கப்பட்டு வரு​கின்​றன. இது தொடர்​பான அழுத்​தங்​களை முதல்​வரை சந்​திக்​கும்​போதும், திமுக மூத்த நிர்​வாகி​கள் மத்தியிலும் விசிக​வினர் முன்​வைத்து வரு​கின்​றனர்.

மறு​முனை​யில் அதி​முக கூட்​ட​ணி​யும் நாளுக்கு நாள் வலு​வாக மாறி வரு​கிறது. அவர்​கள் அரசு சறுக்​கும் சின்ன விஷ​யத்​தை​யும் விட​மால் மக்​களிடம் எடுத்​துச் செல்​வதற்​கான நடவடிக்​கைகளை தீவிரப்​படுத்தி வரு​கின்​றனர். இந்த சூழலில் கூட்​ட​ணி​யில் உள்ள ஒவ்​வொரு கட்​சி​யும் திமுக​வுக்கு முக்​கி​யம் என்ற நிலை​யில் கேட்ட தொகு​தி​கள் கிடைக்​கும் என விசிக நிர்​வாகி​கள் நம்பிக்கை தெரிவிக்​கின்​றனர்.

இது தொடர்​பாக விசிக செய்​தித் தொடர்​பாளர் கு.​கா.​பாவலன் கூறும்​போது, “தமிழக அரசி​யலில் தவிர்க்க முடி​யாத சக்​தி​யாக விசிக உரு​மாறி​யுள்​ளது. கூட்​டணி கட்​சிகளிடையே​யான வாக்கு பரி​மாற்​றத்​துக்கு விசிக முக்​கிய பங்​களிப்பை செய்​துள்​ளது. வரும் தேர்​தலில் வடமாவட்​டங்​கள் மட்​டுமின்றி 4 திசைகளி​லும் முக்​கிய தொகு​தி​களை விசிக எதிர்​நோக்குகிறது. இதில் உறுதியாக இருக்கிறோம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x