Published : 14 Jul 2025 04:57 AM
Last Updated : 14 Jul 2025 04:57 AM

மின் வாரியத்தில் நிதி கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட 6 பணியிடங்கள் உருவாக்கம்

சென்னை: தமிழக மின் வாரி​யம் மின்​சா​ரத்தை உற்​பத்தி செய்து நுகர்​வோருக்கு விநி​யோகம் செய்து வரு​கிறது. தமிழகத்​தின் சொந்த மின் உற்​பத்தி தவிர தேவைக்கு ஏற்ப வெளி மாநிலங்​கள், வெளிச்​சந்​தைகளில் இருந்து கொள்​முதல் செய்​கிறது. உற்பத்தியாகும் மின்​சா​ரம் முழு​வதும், கிரிட் எனப்​படும் மின் கட்​டமைப்பு மூலம் மாநில மின் பகிர்ந்​தளிப்பு மையம் மூலம் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது.

மின் கட்​டமைப்​பின் பணி​கள் சவாலானது என்​ப​தால் அதற்​கான முழுத்​திறனில் செயல்பட வேண்​டும் என்​ப​தற்​காக நிதி கட்​டுப்​பாட்டாளர் உள்​ளிட்ட 6 பணி​யிடங்​களை உரு​வாக்கி மின்​வாரி​யம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

இதுகுறித்து தமிழக மின் வாரிய தலை​வர் ஜெ.​ரா​தாகிருஷ்ணன் பிறப்​பித்த உத்​தர​வு: மின் பகிர்ந்​தளிப்பு மையங்​களின் பணியாளர்களின் முழுத்​திறன் செயல்​பாட்​டுக்​காக மத்​திய மின்​சா​ரத் துறை வெளி​யிட்ட வழி​காட்டு நெறி​முறை​களின்​படி மின் தொடரமைப்பு கழகத்​தின் முதன்​மைப் பொறி​யாளர் மின் கட்​டமைப்​புக்கு நிதி கட்​டுப்​பாட்​டாளர், துணை நிதி கட்​டுப்​பாட்​டாளர், கணக்கு அலு​வலர், கணக்கு மேற்​பார்​வை​யாளர் என தலா ஒரு பணி​யிட​மும், 2 உதவி​யாளர்​களும் என 6 பணி​யிடங்​களை உருவாக்க கோரிக்கை வைத்​ததன் அடிப்​படை​யில், 6 பணி​யிடங்​கள் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளன. இந்த பணி​யாளர்​களுக்கு அகவிலைப்​படி, வீட்டு வாடகைப்​படி போன்ற சலுகைகள் பொருந்​தும். இவ்​வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x