Published : 14 Jul 2025 04:47 AM
Last Updated : 14 Jul 2025 04:47 AM

தேர்தல் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும்: திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

சென்னை: தேர்தல் வெற்​றிக்கு அயராது பாடு​படு​மாறு திமுக தொண்​டர்​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுரை வழங்கியுள்ளார். மக்​களின் கோரிக்​கைகளைக் கேட்​பது​போல, திமுக​வினரின் மனக்​குரலை அறிந்து கொள்​வதற்​காக, ‘உடன்​பிறப்பே வா’ எனும் தொகு​தி​வாரி​யான நிர்​வாகி​கள் சந்​திப்​புக் கூட்​டத்தை ஏற்​பாடு செய்​வ​தாக முதல்​வரும் திமுக தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​திருந்​தார்.

அந்த வகை​யில் கடந்த ஜூன் 13-ம் தேதி முதல், சென்​னை​யில் உள்ள திமுக தலை​மையகத்​தில் நிர்​வாகி​களை நேரடி​யாக சந்தித்து முதல்​வர் கருத்​துகளை கேட்​டறிந்து வரு​கிறார். இது​வரை 12 நாட்​கள் நடை​பெற்​றுள்ள கூட்​டத்​தில் ஆயிரத்​துக்​கும் மேற்பட்ட பகு​தி, வட்​டம், நகர, ஒன்​றிய, பேரூர் நிர்​வாகி​களை சந்​தித்​து, முதல்​வர் கலந்​துரை​யாடி​யுள்​ளார். அப்​போது நிர்​வாகி​களுக்கு உற்​சாகமூட்​டி, புத்​தகங்​கள் வழங்​கியதோடு, தொகுதி நில​வரங்​கள் குறித்து கேட்​டறிந்து வரு​கிறார்.

குறிப்​பாக தொகு​தி​களில் ஆட்​சி​யின் மீது ஆண்​கள், பெண்​கள், இளைஞர்​கள் ஆகியோரின் ஆதரவு எப்​படி உள்​ளது. மக்​கள் என்ன எதிர்​பார்க்​கிறார்​கள் எனக் கேட்​டறிகிறார். தொழில், விவ​சாயப் பணி​கள், குடும்ப நில​வரங்​கள், அவர்​களது வேலைகள் குறித்து கேட்​டறிந்து அவர்​களுக்கு தகுந்த அறி​வுரைகளை​யும் முதல்​வர் வழங்​கு​கிறார். இது தொண்​டர்​களிடையே மகிழ்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இது​மட்​டுமின்​றி, தொகு​தி​யின் உட்​கட்​டமைப்பு வசதி​கள் குறித்து கேட்​டறிந்​து, உடனடி​யாக சம்​மந்​தப்​பட்ட அமைச்​சர்​களை தொடர்​பு​கொண்டு பல கோரிக்​கைகளை முதல்​வர் நிறைவேற்​றி​னார். அப்​போது, முதல்​வருட​னான பல பழைய பசுமை​யான நினை​வு​களை நிர்​வாகி​கள் நினை​வுப்​படுத்தி மகிழ்ந்​தனர்.

கூட்​டத்​தில் முதல்​வர் வழங்​கிய அறி​வுரை குறித்து கட்சி நிர்​வாகி​கள் கூறிய​தாவது: ஓரணி​யில் தமிழ்​நாடு இயக்​கத்​தில் உறுப்பினர் சேர்க்கை அதி​கப்​படுத்த வேண்​டும். அதன் முக்​கி​யத்​து​வத்தை உணர்ந்து அனை​வரும் அதில் தாமாகவே முன்​வந்து இணைத்து கொள்​ளும் அளவுக்கு பணி​யாற்ற வேண்​டும். அனைத்​துத் தரப்​பினருக்​கும் அரசு செயல்​படுத்தி வரும் சிறப்​பான திட்டங்​களை​யும், சாதனை​களை​யும் அவர்​களிடம் எடுத்​துச் சொல்லி திமுக அரசின் செயல்​பாடு​களை விளக்க வேண்​டும்.

பொது மக்​களைச் சந்​திக்​கும்​போது, மொழி​யால் தமிழன், இனத்​தால் திரா​விடன், நாட்​டால் இந்​தி​யன், உலகத்​தால் மனிதன் எனும் வழி​யில் அணுக வேண்​டும். தமிழக அரசின் திட்​டங்​களை பொது​மக்​கள் அறி​யும் வகை​யில் சிறப்​பாக எடுத்​துரைக்க வேண்​டும். இதில் எந்​த​வித சுணக்​க​முமின்றி விழிப்​புடன் பணி​யாற்ற வேண்​டும்.

மக்​கள் ஆதரவு பெரு​கப் பெருக பொறுப்​பும், கடமை​யும் கூடு​கிறது. எதிர்​பார்ப்பு அதி​கம் ஆகிறது. அதைக் காப்​பாற்ற அனை​வரும் கடின​மாக உழைத்​தாக வேண்​டும். அதி​க​மாக உழைக்க நான் தயா​ராக இருக்​கிறேன். வளர்ச்சி என்​பது என்​னால் மட்​டும் ஆனதல்ல, தொண்​டர்​கள் ஒவ்​வொரு​வரின் ஆக்​கப்​பூர்​வ​மான நடவடிக்​கை​யால் ஆனது. வெற்​றியை பெற்​றுத்தர அனை​வரும் அயராது பாடுபட வேண்​டும். இவ்​வாறு முதல்​வர் அறி​வுறுத்​தி​ய​தாக கட்​சி நிர்​வாகிகள்​ தெரிவித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x