Published : 14 Jul 2025 04:39 AM
Last Updated : 14 Jul 2025 04:39 AM

மருத்துவ துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி மருத்துவர் தின விழா- ஆளுநர் ‘எண்ணித் துணிக’ நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மருத்துவ ஆளுமைகளுடன் கலந்துரையாடல் நிகழ்வு ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் 50 ஆளுமைகளுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

சென்னை: மருத்து​வத் துறை​யில் இந்​தி​யா​வின் மற்ற மாநிலங்​களுக்கு முன்​மா​திரி​யாக தமிழகம் உள்​ள​தாக ஆளுநர் ஆர்​.என்​.ரவி தெரி​வித்​துள்​ளார். தேசிய மருத்​து​வர் தினத்​தையொட்டி மருத்​து​வர் தின விழா- ஆளுநர் ‘எண்​ணித் துணிக’ நிகழ்ச்​சி​யின் ஒருபகு​தி​யாக மருத்​துவ ஆளு​மை​களு​டன் கலந்​துரை​யாடல் நிகழ்வு ஆளுநர் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது.

ஆளுநர் ஆர்​.என்​. ரவி தலைமை வகித்து மருத்​து​வத்​துறை​யில் சிறந்து விளங்​கும் 50 ஆளு​மை​களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுர​வித்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: மருத்​து​வர்​களை ஒவ்​வொரு நாளும் போற்றி வாழ்த்த வேண்​டும். ஏனென்​றால் சமூகத்​தில் நிகழும் துயர​மான தருணங்​களில் நம் நினை​வுக்கு முதலில் வரு​வது மருத்​து​வர்​கள்தான்.

அதனால்​தான் அவர்​களை உயிருள்ள கடவுள் என்​றழைக்​கிறோம். நாம் கார்​கில் போரில் இழந்த வீரர்​களின் எண்​ணிக்​கை​யை​விட கரோனா காலத்​தில் இழந்த மருத்​து​வர்​களின் எண்​ணிக்​கையே அதி​கம். இது மரணத்​தை​யும் மீறிய மகத்​தான தியாக​மாகும். பாடப்​புத்​தகங்​களில் ஆசிரியர்​களை போல, மருத்​து​வர்​களுக்​கும் முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்பட வேண்​டும்.

மருத்​து​வத் துறை​யில் இந்​தி​யா​வின் மற்ற மாநிலங்​களுக்கு முன் மாதிரி​யாக தமிழகம் உள்​ளது. உலகம் முழு​வதும் இருந்து சிகிச்​சைக்​காக நோயாளி​கள் தமிழகத்​துக்கு வரு​வது பெரு​மைக்​குரிய விஷ​யம். 2047-ம் ஆண்​டுக்​குள் வளர்ச்சி அடைந்த நாடாக இந்​தியா மாற வேண்​டும் என்​றால், அதை சாத்​தி​ய​மாக்க மக்​கள் ஆரோக்​கிய​மாக இருக்க வேண்​டும்.

மக்​களின் உடல் நலமே நாட்​டின் வளர்ச்​சிக்​கும் தூணாக இருக்​கும். அந்​தவகை​யில் நலமுள்ள இந்​தி​யாவை உரு​வாக்​கு​வ​தில் மருத்​து​வர்​கள் பங்கு பெரியள​வில் உள்​ளது. மருத்​து​வர்​களின் அறி​வுரைகள் பள்​ளி​களுக்​கும் இளைஞர்​களுக்​கும் பொது​மக்​களுக்​கும் மீண்​டும் மீண்​டும் பகிரப்பட வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x