Published : 14 Jul 2025 12:26 AM
Last Updated : 14 Jul 2025 12:26 AM

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் 7 பேர் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சிறைப்பிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்கள்

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ராமேசுவரம் மீன்​பிடி துறை​முகத்​தில் இருந்து 500 விசைப்படகு​களில் 3 ஆயிரம் மீனவர்​கள் கடந்த 12-ம் தேதி கடலுக்​குச் சென்​றனர். ஈசாக் என்​பவரது விசைப்​படகில் சென்ற ரூதர், சண்​முகம், எடிசன், சக்​திவேல், ஜெகதீஷ், டல்​வின் ராஜ், அன்​பழகன் ஆகிய 7 மீனவர்​கள், நெடுந்​தீவு அருகே பாக் நீரிணை கடல் பகு​தி​யில் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​தனர்.

அப்​போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்​படை​யினர், எல்லை தாண்டி வந்​த​தாக கூறி, ராமேசுவரம் மீனவர்​கள் 7 பேரை கைது செய்​தனர். அவர்​களது விசைப்​படகை​யும் பறி​முதல் செய்​தனர். 7 பேரும் காங்​கேசன்​துறை கடற்​படை முகா​முக்​கு கொண்டு செல்லப்​பட்​டனர். பின்னர், ஊர்​காவல்​துறை நீதிப​தி உத்​தர​வின்​பேரில் யாழ்ப்​பாணம் சிறை​யில் நேற்று அடைக்கப்பட்டனர்.

அதேபோல, கச்​சத்​தீவு - நெடுந்​தீவு இடையே மரியசீரோன் என்​பவரது விசைப்​படகை சிறைபிடிக்க இலங்கை கடற்​படை​யின் ரோந்​துப் படகு வேக​மாக வந்​தது. அந்த படகு மோதி​ய​தில் விசைப்​படகின் பின்​பகுதி சேதமடைந்​தது. படகில் இருந்த 7 மீனவர்களும் வேக​மாக ​படகை இயக்கி ராமேசுவரம் வந்​தனர்​. இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x