Published : 13 Jul 2025 12:59 AM
Last Updated : 13 Jul 2025 12:59 AM

போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தவர்கள் குடும்பத்துடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு

சென்னை: போலீஸ் விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை தவெக தலை​வர் விஜய் நேற்று சந்​தித்​தார்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனத்​தைச் சேர்ந்த அஜித்​கு​மார், போலீஸ் விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்​தார். இந்த சம்​பவத்​தைக் கண்​டித்து ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என தவெக சார்​பில் அறிவிக்​கப்​பட்​டது. அதன்​படி, சென்னை சிவானந்தா சாலை​யில் இன்று போராட்​டம் நடை​பெற உள்​ளது.

முன்​ன​தாக, கடந்த 4 ஆண்​டு​களில் காவல் நிலைய விசா​ரணைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்டு உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை தவெக தலை​வர் விஜய் நேற்று சந்​தித்​துப் பேசி​னார்.

செங்​கல்​பட்டு மாவட்​டத்​தைச் சேர்ந்த கோகுல்​, அயனாவரத்​தைச் சேர்ந்த விக்​னேஷ், கொடுங்​கையூரைச் சேர்ந்த அப்பு என்ற ராஜசேகர், திரு​வண்​ணா​மலை​யைச் சேர்ந்த தங்​கமணி, புதுக்​கோட்​டையைச் சேர்ந்த சின்​னதுரை, தரு​மபுரியைச் சேர்ந்த செந்​தில் ஆகியோரது குடும்​பத்​தினரை சென்னை பனையூரில் உள்ளகட்​சித் தலை​மைய அலு​வல​கத்​தில் விஜய் சந்​தித்​துப் பேசி​னார்.

அவர்​களிடம், உயி​ரிழந்​தவர்​களை எவ்​வாறு காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்​றனர், உயி​ரிழப்​புக்கு பின் அரசு சார்​பில் நிதி​யுதவி வழங்​கப்​பட்​ட​தா,
சம்​பந்​தப்​பட்​ட​வரின் இறப்​புக்​குப் பின்​னர் குடும்​பத்​தினர் எதிர்​கொண்ட பாதிப்​பு​கள், குடும்​பத்​தின் தற்​போதைய நிலை, வழக்​கின் நிலை, காவலர்​கள் மீது எடுக்​கப்​பட்ட நடவடிக்​கைகள் குறித்து விஜய் கேட்​டறிந்​தார். இன்று சென்​னை​யில் நடை​பெறும் ஆர்ப்​பாட்​டத்​தில், பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரை மேடையேற்​ற​வும் தவெக தரப்​பில் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. மேலும், இதில் விஜய் பங்​கேற்க வாய்ப்​புள்​ள​தாக​வும் தவெக தரப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x