Published : 12 Jul 2025 05:26 AM
Last Updated : 12 Jul 2025 05:26 AM

பாதுகாப்பு துறை ஓய்வூதியர்களுக்காக 12 மாவட்டங்களில் நேரடி குறைதீர் மையங்கள்

பாதுகாப்பு துறை ஓய்வூதியதாரர் குறைதீர் வாகன பிரச்சார தொடக்க விழா சென்னை தேனாம்பேட்டை, பாதுகாப்பு கணக்கு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாதுகாப்பு கணக்கு அலுவலர் டி.ஜெயசீலன் பங்கேற்று ஓய்வூதியதாரர்களின் குறைகளை கேட்டறிந்தார். | படம்: ம.பிரபு |

சென்னை: ​தேனாம்​பேட்​டை​யில் உள்ள பாது​காப்பு கணக்கு கட்​டுப்​பாட்​டாளர் அலு​வல​கத்​தில் சென்னை பாது​காப்பு கணக்கு கட்டுப்​பாட்​டாளர் ஜெயசீலன் கூறிய​தாவது: கடந்த ஜூன் 30-ம் தேதி திருச்​சி​யில் பாது​காப்​புத் துறை ஓய்​வூ​தி​யர்​களுக்​கான சிறப்பு குறைதீர் முகாம் நடை​பெற்​றது. இந்த முகாமில் 7 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பாது​காப்​புத் துறை ஓய்​வூ​தி​யர்​கள் பங்​கேற்​றனர். அன்றைய தினமே 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட குறை​களுக்கு தீர்வு காணப்​பட்​டது. மீத​முள்ள 2000 குறை​கள் ஒரு மாத காலத்​தில் தீர்க்கப்படும்.

இதனை தொடர்ந்து தமிழகம் முழு​வதும் அனைத்து பகு​தி​களுக்​கும் சென்று ஓய்​வூ​தி​யர்​களின் குறை​களைக் கேட்​டறிய 5 பிரச்​சார வாக​னங்​கள் அனுப்​பப்​பட்​டன. இந்த வாக​னங்​கள் மூலம் 5100 புகார்​கள் பெறப்​பட்டு அதில் 3 ஆயிரம் புகார்​களுக்கு அப்​போதே தீர்வு காணப்​பட்​டது. அதே இடத்​தில் தீர்​வு​காண முடி​யாத 2000 புகார்​களுக்கு 21 நாட்​களுக்​குள் தீர்வு காணப்​படும்.

இந்​தி​யா​விலேயே ஓய்​வூ​தி​யர்​களின் வீடு​களுக்கே சென்று குறை​களுக்​குத் தீர்வு காணப்​படு​வது இது முதல்​முறை. தமிழகத்​தில் அடுத்​தகட்​ட​மாக மதுரை​யில் நவம்​பர் மாத​மும், வேலூரில் அடுத்த ஆண்டு மார்ச் மாத​மும் குறைதீர் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்​ளது. 10 சதவீதம் ஓய்​வூ​தி​யர்​கள் ஓய்​வூ​தி​யம் பெறாமல் இருந்​தனர். வெளி​நாடு​களுக்​குச் சென்​றவர்​கள், வேறு மாநிலங்​களுக்​குச் சென்​றவர்​கள் வாழ்​நாள் சான்று பெறாமல் இருப்​பர், அவர்​களை கண்​டறிந்து ஓய்​வூ​தி​யம் வழங்க இத்​திட்​டம் உதவியது.

ஓரிரு மாதங்​களில் ஓய்​வூ​தி​யர்​கள் தொலைபேசி வாயி​லாக குறை​களை நிவர்த்தி செய்ய கால் சென்​டர் அமைக்​கப்​பட​வுள்​ளது. மேலும் 12 மாவட்​டங்​களில் நேரடி குறைதீர் மையங்​கள் அமைக்​க​வும் திட்​ட​மிட்​டுள்​ளோம். இவ்​வாறு அவர் கூறி​னார். இந்​நிகழ்​வின்​போது பாது​காப்பு ஓய்​வூ​தி​யர்​களுக்கு பிரச்​சார வாக​னம் குறித்​தும்​, அதன்​ வாயி​லாகக்​ கிடைக்​கும்​ சேவை​கள்​ குறித்​தும்​ ஜெயசீலன் விளக்​கி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x