Published : 12 Jul 2025 06:09 AM
Last Updated : 12 Jul 2025 06:09 AM

மதிமுகவுக்கு 10 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும்: திமுகவுக்கு துரை வைகோ கோரிக்கை

திருச்சி: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 8 தொகு​தி​களில் வெற்றி பெற்​றால்​தான் கட்​சிக்கு அங்​கீ​காரம் கிடைக்கும் என்​ப​தால், 10, 12 தொகு​தி​களிலா​வது போட்​டி​யிட வேண்​டும் என்​பது​தான் கட்​சி​யினரின் விருப்​பம் என்று மதி​முக முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ எம்​.பி. கூறி​னார்.

திருச்சி விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அரசி​யலில் தவறு நடப்​பது இயல்​பு​தான். செய்த தவறை (அதி​முக​வுடன் கூட்​டணி வைத்​ததை) ஒப்​புக்​கொண்டு வைகோ பேசி​யுள்​ளார். அந்​தக் காலத்​தில் மதி​முக வைத்த கூட்​டணி வரலாற்​றுப் பிழை. அதில் அவருக்கு அவப்​பெயர் ஏற்​பட்​டது. ஆனால், எம்​ஜிஆரையோ, ஜெயலலி​தாவையோ கொச்​சைப்​படுத்தி பேச​வில்​லை.

மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்​பது குறித்து வைகோ முடி​வெடுப்​பார். திமுக​வில் தற்​போது சேர்க்​கப்​பட்​ட​வர், 3 ஆண்டுகளுக்கு முன்பே மதி​முக​வில் இருந்து நீக்​கப்​பட்​ட​வர். மேலும் 11 பேர் நீக்​கப்​பட்டு உள்​ளனர். மதி​முக​வுக்கு அங்​கீ​காரம் பெறுவது முக்கி​யம்.

அதற்கு குறைந்​த​பட்​சம் 10, 12 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டு, 8 தொகு​தி​யில் வெற்றி பெற்றால்தான் அங்​கீ​காரம் கிடைக்கும். இது​தான் எங்​களது கட்​சி​யினர் விருப்பம்.இவ்​வாறு அவர் கூறி​னார். பேட்​டி​யின்​போது, கட்​சி​யின் துணைப் பொதுச் செய​லா​ளர் டாக்​டர் ரொஹை​யா, மாவட்​டச் செய​லா​ளர்​கள் வெல்​லமண்டி சோமு, மணவை தமிழ்​மாணிக்​கம் உடனிருந்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x