Published : 12 Jul 2025 05:59 AM
Last Updated : 12 Jul 2025 05:59 AM
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 30,250 கனஅடியாக குறைந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக இருந்தது.
மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 35,250 கன அடியாக இருந்த நீர்வரத்து மதியம் 30,250 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு நேற்று காலை 9 மணிக்கு விநாடிக்கு 35,000 கனஅடியிலிருந்து 30,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 250 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 9-ம் தேதி காலை விநாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக பதிவான நீர்வரத்து 10-ம் தேதி மதியம் 2 மணியளவில் 32 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நேற்று காலை நீர்வரத்து மேலும் குறைந்து விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக பதிவானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT