Published : 12 Jul 2025 05:52 AM
Last Updated : 12 Jul 2025 05:52 AM

எனது வீட்டில் அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி: பாமக நிறுவனர் ராமதாஸ் அதிர்ச்சி தகவல்

கடலூர் / மயிலாடுதுறை: எனது வீட்​டில் அதிநவீன ஒட்டு கேட்​கும் கருவி பொருத்​தப்​பட்​டுள்​ள​து என பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். கடலூர் மேற்கு மாவட்ட பாமக செயற்​குழுக் கூட்​டம் விருத்​தாசலத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதில் ராம​தாஸ் பேசி​ய​தாவது: மாநில பொதுக்​குழுக் கூட்​டத்​தில் 2,700 பேர் கலந்​து​கொண்​டனர். என்​எல்சி நிறு​வனத்​துக்கு நிலம் கொடுத்து பாதிக்​கப்​பட்​டோருக்​காக பாமக தொடர்ந்து போராடி​யும், என்​எல்சி நிறு​வனம் செவி​சாய்க்​க​வில்​லை. எங்​கள் போராட்டம் தொடரும். 10.5 சதவீத இடஒதுக்​கீட்​டைப் பெற, உங்​களிடம் உள்ள விலைம​திப்​பற்ற ஆயுத​மான வாக்​கு​களைப் பயன்​படுத்த வேண்​டும்.

மற்​றவர்​களுக்கு வாக்​களித்​தால் நமக்கு ஏமாற்​றம்​தான் மிஞ்​சும். நம்​மிடம் 40 எம்​எல்​ஏக்​கள், 5 எம்​.பி.க்​கள் இருந்​திருந்​தால் என்எல்சி நிறு​வனம் பயந்​திருக்​கும். எனவே, சரி​யானவர்​களுக்கு வாக்​களிக்க வேண்​டும். இம்​முறை பாமக​வுக்கு வாக்​களிக்க வேண்​டும். இவ்​வாறு ராம​தாஸ் பேசி​னார்.

கூட்​டத்​தில், பாமக கவுரவ தலை​வர் ஜி.கே. மணி, வன்​னியர் சங்​கத் தலை​வர் பு.​தா.அருள்​மொழி உள்ளிட்​டோர் பங்​கேற்​றனர். பின்னர் ராம​தாஸ் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “எனது வீட்​டில், எனது நாற்​காலிக்கு அரு​கில் அதிநவீன ஒட்டு கேட்​கும் கருவி பொருத்​தப்​பட்​டிருந்​தது. இதை 2 நாட்​களுக்கு முன்​பு​தான் கண்​டு​பிடித்​தோம். இது லண்​டனில் இருந்து தருவிக்​கப்​பட்ட, அதிக விலை​உள்ள கரு​வி​யாகும். இதை யார் வைத்​தது, எதற்​காக வைத்​தார்​கள்? என்று ஆராய்ச்சி செய்து கொண்​டிருக்​கிறோம்” என்றார்.

கல்லூரி கட்டுவதில் தவறில்லை: ​பாமக நிறு​வனர் ராம​தாஸ் மயி​லாடு​துறை மாவட்​டம் பூம்​பு​காரில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: பாமக சேரும் அணி பெரிய வெற்​றியை பெறும். எனது மகளை கட்​சித் தலை​வ​ராக்​கும் நோக்​கில் நான் மகளிர் மாநாடு நடத்​த​வில்​லை. வடக்கு வாழ்​கிறது, தெற்கு தேய்​கிறது என்​ப​தற்​கேற்ப தமிழகத்​துக்கு நிதி ஒதுக்​கீடு குறை​வாகவே உள்​ளது. பிரதமர் எனக்கு நண்​பர், அதனால் நிதி​யைக் கேட்டு வாங்​கு​வேன்.

கோயில்​களுக்கு அதிக வரு​மானம் வந்​தால், கல்​லூரி கட்​டு​வ​திலோ, கல்வி நிறு​வனங்​கள் தொடங்​கு​வ​திலோ தவறில்​லை. பூம்புகாரில் நடை​பெறும் மகளிர் மாநாட்​டில் அன்​புமணி கலந்​து​கொள்​வாரா என்​பது, போகப்​போகத்​தான் தெரி​யும். இவ்​வாறு ராம​தாஸ்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x