Published : 12 Jul 2025 05:31 AM
Last Updated : 12 Jul 2025 05:31 AM

கலப்பட உரம், போலி விதையை தடுக்க கடும் சட்டங்கள்: மத்திய ஜவுளி, வேளாண் துறை அமைச்சர்கள் உறுதி

கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க நிறுவன வளாகத்தில் நேற்று பருத்தி சாகுபடி தொடர்பாக அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்த மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுஹான், மத்திய ஜவுளி துறை அமைச்சர் கிரிராஜ் சிங். | படம்: ஜெ.மனோகரன் |

கோவை: பருத்தி சாகுபடியை அதி​கரிக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். மேலும், போலி விதை, கலப்பட உரம் விற்​பனையைத் தடுக்க கடும் சட்​டம் இயற்​றப்​படும் என்று மத்​திய அமைச்​சர்​கள் கூறி​னார். மத்​திய பருத்தி ஆராய்ச்சி நிலை​யம் சார்​பில், பருத்தி உற்​பத்​தியை மேம்​படுத்​து​வது குறித்த கலந்​தாய்​வுக் கூட்​டம் கோவை​யில் உள்ள கரும்பு இனப்​பெருக்க நிறுவன வளாகத்​தில் நேற்று நடந்​தது.

மத்​திய வேளாண் துறை அமைச்​சர் சிவ​ராஜ்சிங் சவுஹான், மத்​திய ஜவுளித் துறை அமைச்​சர் கிரி​ராஜ் சிங் ஆகியோர் சிறப்பு விருந்​தினர்​களாக கலந்​து​ கொண்​டனர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர்​கள் கூறிய​தாவது: மக்​களின் அடிப்​படைத் தேவை​களில் ஒன்​றான ஆடை தயாரிப்​பில் பருத்தி முக்​கியப் பங்கு வகிக்​கிறது. ஒரு காலத்​தில் இந்​தி​யா​வில் அதிக அளவு பருத்தி உற்​பத்தி செய்​யப்​பட்​டது. தற்​போது உற்​பத்தி மற்​றும் தரம் ஆகியவை குறைந்​து​விட்​டன.

விவ​சா​யிகள், வேளாண் விஞ்​ஞானிகள் உள்​ளிட்ட அனைத்து தரப்​பினரும் ஒன்​றிணைந்து ‘மோடி மிஷன்’ என்ற பெயரில் நாடு முழு​வதும் பருத்தி சாகுபடியை அதி​கரிக்க தீவிர நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இதற்​காக ‘டீம் காட்​டன்’ என்ற அமைப்பு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. நாட்​டுக்​குத் தேவை​யான அளவுக்கு பருத்தி உற்​பத்தி செய்​வது அவசி​யம். உள்​நாட்​டுத் தேவைக்​கு​போக மீத​முள்​ளவற்றை ஏற்​றுமதி செய்ய வேண்​டும். தேவையைக் கருத்​தில் கொண்​டு, அதற்​கான ஆராய்ச்​சிகள் மேற்​கொள்​ளப்​படும்.

தென்​னிந்​தி​யா​வில் இயந்​திரப் பரிசோதனை மையம் அமைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. புழு (போல் வேர்ம்) தாக்​குதலை எதிர்​கொள்ள ‘ஏஐ’ தொழில்​நுட்​பம் மூலம் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும். கோவை நிகழ்ச்​சி​யில் கலந்து கொள்​ளு​மாறு தமிழக விவ​சா​யத் துறை அமைச்​சருக்கு முறைப்​படி அழைப்பு விடுக்​கப்​பட்​டது. எனினும், அவர் வரவில்​லை. நாங்​கள் மத்​திய, மாநிலம் என்று பாகு​பாடு பார்ப்​ப​தில்​லை.

பருத்​திக்கு விதிக்​கப்​படும் 11 சதவீத இறக்​குமதி வரியை நீக்க வேண்​டும் என்ற தொழில் துறை​யினரின் கோரிக்​கையை பரிசீலித்து வரு​கிறோம். கலப்பட உரம், போலி விதை பிரச்​சினை அதி​கம் உள்​ளது. அபராதம் விதிக்​கும் வகை​யில் மட்​டுமே தற்​போது சட்​டம் உள்​ளது. எனவே, இவற்றை முற்​றி​லும் தடுக்க தண்​டனை​களை கடுமை​யாக்​கி, சட்​டம் இயற்ற நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும். இவ்​​வாறு மத்​திய அமைச்​சர்​கள் தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x