Published : 12 Jul 2025 05:17 AM
Last Updated : 12 Jul 2025 05:17 AM

உங்களுக்காக நான் இருக்கிறேன்; எனக்கு வேறு எவருமில்லை: பாமக தொண்டர்களுக்கு அன்புமணி எழுதிய கடிதத்தில் உருக்கம்

சென்னை: உங்​களுக்​காக நான் இருக்​கிறேன். எனக்கு உங்​களைத் தவிர வேறு எவரு​மில்​லை. நாம் அனை​வரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்​போம் என்று தொண்​டர்​களுக்கு பாமக தலை​வர் அன்​புமணி கடிதம் எழு​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் நேற்று எழு​தி​யுள்ள கடிதம்: தமிழகத்​தில் அனைத்​துத் தரப்பு மக்​களின் குரலாக​வும், பாது​காவல​னாக​வும் திகழ்ந்து கொண்​டிருக்​கும் பாமக 16-ம் தேதி 37-ம் ஆண்​டில் அடி​யெடுத்து வைக்​கிறது.

இம் மாபெரும் மக்​கள் இயக்​கத்தை கட்டி எழுப்​பிய ராம​தாஸுக்கு வணக்​கங்​களை​யும், உலகெங்​கும் வாழும் பாட்​டாளி சொந்​தங்​களாகிய உங்​கள் அனை​வருக்​கும் எனது உளமார்ந்த வாழ்த்​துகள்.

36 ஆண்​டு​கள் ஆகி​யும் நம்​மால் இன்​னும் ஆட்​சியை பிடிக்க முடி​யாமல் இருப்​பது பெரும் குறை​யாக​வும், வருத்​த​மாக​வும் இருந்​தா​லும்​கூட தமிழக மக்​களுக்​காக​வும், சமூகநீ​திக்​காக​வும் நாம் ஆற்​றிய பணி​கள் மனதுக்கு நிறை​வைத் தரு​கின்​றன. அனைத்து மாவட்​டங்​களி​லும் உறுப்​பினர் சேர்க்​கை, வாக்​குச்​சாவடி முகவர் குழுக்​களை அமைக்​கும் பணி​களை​யும் விரைந்து முடிக்க வேண்​டும்.

புதி​தாக சேர்க்​கப்​பட்ட உறுப்​பினர்​களுக்கு பாம​கா​வால் தமிழகத்​துக்க கொண்டு வரப்​பட்ட திட்​டங்​கள் ஆகியவை குறித்து விளக்க வேண்​டும். தமிழக மக்​களை திமுக ஆட்​சி​யின் கொடுமை​களில் இருந்து காக்க வேண்​டிய கடமை​யும் நமக்கு உள்​ளது.

ராம​தாஸ் பிறந்​த​நாளான ஜூலை 25 முதல் தமிழ்​நாடு நாளான நவம்​பர் 1-ம் தேதி வரை தமிழக முழு​வதும் மக்​கள் உரிமை மீட்​புப் பயணம் மேற்​கொள்​ள​விருக்​கிறேன்.

தமிழகத்தை காப்​பது​தான் பாமக​வின் நோக்​கம் எனும் நிலை​யில், இவற்றை சிறப்​பாக செயல்​படுத்​து​வதற்​கான உறு​தி​மொழியை ஏற்​றுக்​கொள்​வது தான் பாமக​வின் 37-ம் ஆண்டு தொடக்​க​விழா​வில் நாம் அனை​வரும் செய்ய வேண்​டிய முதன்மை செய​லாகும்.

உங்​களுக்​காக நான் இருக்​கிறேன். எனக்கு உங்​களைத் தவிர வேறு எவரு​மில்​லை. நாம் அனை​வரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்​போம்​. இது உறு​தி. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x