Published : 12 Jul 2025 04:41 AM
Last Updated : 12 Jul 2025 04:41 AM

100-வது சுதந்திர தினத்தில் தன்னிறைவை அடைவோம்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் உறுதி

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உடன் நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம், ஐஐடி நிர்வாகக் குழு தலைவர் பவன் கோயங்கா மற்றும் இயக்குநர் வி.காமகோடி. | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: நம்​நாட்​டின் 100-வது சுதந்​திர தினத்​தின் போது பொருளா​தா​ரம், தொழில்​நுட்​பத்​தில் நாம் தன்​னிறைவு பெற்​றிருப்போம். அதற்கு இளைஞர்​களின் பங்​களிப்பு மிக அவசி​ய​மானது என்று தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித்​தோவல் தெரி​வித்​தார். சென்னை ஐஐடி​யின் 62-வது பட்​டமளிப்பு விழா நேற்று ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி தலை​மை​யில் நடை​பெற்​றது.

இதில் முதன்மை விருந்​தின​ராக தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித்​தோவல், சிறப்பு விருந்​தின​ராக பரத​நாட்​டிய கலைஞர் பத்மா சுப்​பிரமணி​யம் ஆகியோர் கலந்து கொண்​டனர். இந்த விழா​வில் 529 பிஎச்டி உட்பட மொத்​தம் 3,227 மாணவர்​களுக்கு பட்டங்​கள் வழங்​கப்​பட்​டன.

இதுத​விர கல்வி மற்​றும் இதர செயல்​பாடு​களில் சிறந்து விளங்​கியதற்​காக இந்​திய குடியரசு தலை​வர் விருது மற்​றும் பாரத் ரத்னா விஸ்​வேஸ்​வரய்யா நினைவு விருது ஆகியவை மாணவர் பி.எஸ்​.அனிரூத்​துக்​கும், டாக்​டர் சங்​கர் தயாள் சர்மா விருது மாணவர்ஆர்​.அபின​வுக்​கும், ஆளுநர் விருது ராஜகோ​பால் சுப்​ரமணி​யத்​துக்​கும் வழங்​கப்​பட்​டன. இந்த சிறப்பு விருதுகளை தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் வழங்கி கவுர​வித்​தார்.

தொடர்ந்து விழா​வில் அஜித் தோவல் பேசி​ய​தாவது: வாய்ப்​பு​களை பயன்​படுத்தி இந்த சமூகத்​துக்​காக மாணவர்​கள் பணி​யாற்ற வேண்​டும். நாட்​டின் 100-வது சுதந்​திர தினம் கொண்​டாட இன்​னும் 22 ஆண்​டு​கள் இருக்​கின்​றன.

அந்த காலக்​கட்​டத்​தில் நீங்​கள் சிறந்த அனுபவ​மும், சிறந்த அறி​வும், பொருளா​தா​ரத்​தில் தன்​னிறைவை​யும் பெற்​றிருப்​பீர்​கள். 100-வது சுதந்​திர தினத்​தின்​போது, நாட்​டின் ஜிடிபி 33 டிரில்​லியன் டால​ராக இருக்​கும். அப்​போது நம்​மை​விட சீனா 22 சதவீதம் குறைவாக இருக்​கும். நாம்​தான் உலகின் மிகப்​பெரிய ராணுவ படையை​யும் வைத்​திருப்​போம்.

தற்​போது செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​ப​மும் வளர்ச்சி கண்டு வரு​கிறது. அதற்​கேற்ப நமது உள்​நாட்டு தொழில்​நுட்ப வளர்ச்​சிகளை மேம்​படுத்தி வரு​கிறோம். அதில் அதி​க​மாக நாம் ஆராய்ச்​சிகள் மேற்​கொள்ள வேண்​டும்.

ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை உள்​நாட்டு தொழில்​நுட்​பத்​தால் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளதை நினைத்து பெரு​மைப்​படு​கிறோம். பிரம்​மோஸ் மற்​றும் வான்​தடுப்பு பாது​காப்​பு, தகவல் தொடர்பு சாதனங்​கள் ஆகியவை மிக​வும் சிறப்​பாக செயல்​பட்​டன. பாகிஸ்தானில் உள்ள 9 தீவிர​வாத முகாம்​களை மட்​டுமே இலக்​காக கொண்டு நாம் தாக்​குதல் நடத்​தினோம்.

பாகிஸ்​தான் மீதான ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கைகளை 23 நிமிடங்​களில் முடித்​து​விட்​டோம். பாகிஸ்​தான் உட்பட வெளி​நாட்டு ஊடகங்​கள் இந்​தியா மீது பாகிஸ்​தான் பாதிப்​பு​கள் ஏற்​படுத்​தி​ய​தாக தவறாக செய்​தி​கள் வெளி​யிட்​டன. இந்​தி​யா​வுக்கு பாதிப்பு ஏற்​பட்​டது போன்ற ஒரு படத்தை அவர்​களால் ஆதா​ர​மாக வெளி​யிட முடி​யு​மா. நாம், பாகிஸ்​தான் தீவிர​வாத முகாம்​கள் மீது நடத்திய தாக்​குதலுக்​கான ஆதா​ரங்​களை சேகரித்​துள்​ளோம். பாகிஸ்​தான் விமானபடைத்​தளம் மீது நாம் நடத்​திய தாக்​குதல் சரிசெய்​யப்​பட​வில்​லை. அதுவே சான்​று.

மாணவர்​கள் அனை​வரும் நாட்​டுக்​காக சேவை​யாற்ற வேண்​டும். பொருளா​தா​ரம், அறி​வியல், தொழில்​நுட்​பத்​தில் நாட்டை மேம்படுத்த மாணவர்​களின் பங்​களிப்பு முக்​கி​யம். அடுத்த ஆண்​டு, உலகின் வளர்ந்து வரும் பொருளா​தா​ர வலுமிக்க நாடு​களில் இந்​தியா முக்​கிய இடத்தை பிடிக்​கும். இவ்​வாறு பேசி​னார்.

விழா முடிந்த பின்​னர் சென்னை ஐஐடி​யில் புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள இந்​திய அறி​வு​சார் மையத்​தை​யும் அஜித் தோவல் தொடங்கி வைத்​தார். இந்​தி​யா​வின் கலாச்​சா​ரம் சார்ந்​த மொழி, மானுடம்​, இந்​தி​ய தத்​து​வங்​கள்​ உள்​ளிட்​ட​வற்​றை இந்​த மையம்​ ஆய்​வு செய்​யவுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x