Published : 12 Jul 2025 12:09 AM
Last Updated : 12 Jul 2025 12:09 AM

இரண்டு நாட்கள் பயணமாக ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்

சென்னை: பிரதமர் மோடி 2 நாள் பயண​மாக ஜூலை 27, 28-ம் தேதி​களில் தமிழகம் வரு​கிறார். அரியலூர் மாவட்​டம் கங்​கை​கொண்ட சோழபுரத்​தில் நடை​பெறும் ஆடி திரு​வா​திரை விழா மற்​றும் பெரம்​பலூர், தஞ்​சாவூரில் நடை​பெறும் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க உள்​ளார்.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் அடுத்த ஆண்டு நடை​பெற உள்ளது. தேர்​தலுக்கு இன்​னும் 10 மாதங்​களே உள்ள நிலை​யில், அனைத்து கட்​சிகளும் வேகமாக தயாராகி வருகின்றன. இந்த தேர்​தலில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜகவும் உறு​தி​யாக உள்ளது. இந்த நிலை​யில், கடந்த ஏப்​ரல் மாதம் சென்னை வந்​த மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, அதி​முக​வுடன் கூட்​ட​ணியை உறுதி செய்​தார். அதன்​பிறகு, பாஜக தேசிய தலை​வர் ஜெ.பி.நட்டா தமிழகம் வந்​தார். அப்​போது, கூட்​டணி கட்​சிகளு​டன் பாஜக நிர்​வாகி​கள் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும் என நிர்​வாகி​களுக்கு அறி​வுறுத்​தி​னார்.

அதை தொடர்ந்​து, கடந்த மாதம் மதுரை​யில் நடை​பெற்ற பாஜக நிர்​வாகி​கள் ஆலோ​சனை கூட்​டத்​தில் சிறப்பு விருந்​தின​ராக அமித் ஷா பங்​கேற்று பல்​வேறு அறி​வுறுத்​தல்​கள், ஆலோ​சனை​களை நிர்​வாகி​களுக்கு வழங்​கி​னார். தொடர்ந்​து, அடிக்​கடி தமிழகம் வரு​வேன் என்றும் அமித் ஷா கூறி​யிருந்​தார். அதன்​படி, கடந்த 8-ம் தேதி அமித் ஷா சென்னை வர இருப்​ப​தாக​வும், அப்​போது கூட்​டணி கட்சி தலை​வர்​களை சந்​திக்க திட்​ட​மிட்​டிருந்​த​தாக​வும் கூறப்​பட்​டது.

ஆனால், அமித் ஷாவின் சென்னை வருகை திடீரென ரத்​தானது. பாஜக தேசிய தலைமை மாற்​றம் தொடர்​பான பணிகளில் அமித் ஷா முழு கவனம் செலுத்திவரு​வ​தால், கட்​சி​யின் தேசிய தலைமை நியமனத்​துக்கு பிறகு, அவர் சென்னைக்கு வரக்கூடும் என்றும், அதற்கு முன்பாக பிரதமர் மோடி தமிழகம் வர வாய்ப்பு உள்ளதாகவும் பாஜக வட்​டாரத்​தில் கூறப்​பட்​டது.

இதற்​கிடையே, சமீபத்தில் இந்து முன்னணி சார்​பில் மதுரை​யில் முரு​க பக்​தர்​கள் மாநாடு நடை​பெற்​றது. இந்த மாநாடு வெற்றி பெற்​ற​தாக பாஜக தலை​வர்​கள் தெரி​வித்து வரு​கின்​றனர். இந்த ​நிலை​யில், அதே​போன்ற ஆன்​மிக நிகழ்ச்​சியை பிரம்​மாண்​ட​மாக நடத்த பாஜக திட்​ட​மிட்​டுள்​ளது. அதன்​படி, அரியலூர் மாவட்​டம் கங்கைகொண்ட சோழபுரத்​தில் ஆடி ​திரு​வா​திரை விழாவை சிறப்​பாக நடத்த பாஜக திட்​ட​மிட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

அரியலூர் மாவட்​டம் கங்​கை​ கொண்ட சோழபுரத்​தில் ராஜேந்​திரசோழ​னால் 1,000 ஆண்​டு​களுக்கு முன்பு கட்​டப்​பட்​டது பிரகதீஸ்​வரர் கோயில். கங்கை வரை படையெடுத்​து சென்று வெற்றி பெற்​றதன் நினை​வாக, கங்​கை​யில் இருந்து புனிதநீர் கொண்​டு​வரப்​பட்டு கும்​பாபிஷேகம் நடத்​திய பெருமை வாய்ந்​தது இந்​த கோயில். இங்கு ராஜேந்​திர சோழனின் பிறந்தநாளான ஆடி திரு​வா​திரை தினத்தை, தமிழக அரசு கடந்த 2023-ம் ஆண்டு முதல் அரசு விழா​வாக கொண்​டாடி வரு​கிறது. அன்​றைய தினம் உள்​ளூர் விடு​முறை விடப்​பட்​டு, கோயில் வளாகத்​தில் கலைநிகழ்ச்​சிகள், சொற்​பொழி​வு​கள் நடை​பெறு​ம்.

முதல்வரும் பங்கேற்பு? - இந்​நிலை​யில், ராஜேந்​திரசோழன் பிறந்தநாளை இந்த ஆண்டில் மத்​திய கலாச்​சார துறை சார்​பில் 5 நாள் விழா​வாக கொண்​டாட மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது. அதன்​படி, ராஜேந்​திர சோழன் பிறந்தநாளான ஜூலை 23-ம் தேதி, விழாவை மத்​திய கலாச்​சா​ரத்துறை அமைச்​சர் கஜேந்​திரசிங் ஷெகாவத் தொடங்​கிவைக்​கிறார். நிறைவு நாளான ஜூலை 27-ம் தேதி நடை​பெறும் திரு​வாசகம் மாநாட்​டில், பிரதமர் மோடி பங்​கேற்க உள்​ள​தாக​வும், அவர் கங்​கை​கொண்ட சோழபுரம் கோயில் பொறிக்​கப்​பட்ட நினைவு நாண​யத்தை வெளி​யிட உள்​ள​தாக​வும் தகவல் வெளி​யாகி உள்​ளது. இந்த நிகழ்ச்​சி​யில் முதல்​வர் ஸ்டா​லினும் பங்​கேற்க வாய்ப்பு இருப்​ப​தாக கூறப்​படு​கிறது.

இதையொட்டி, வரும் 26-ம் தேதி டெல்​லி​யில் இருந்து கேரளாசெல்​லும் பிரதமர் மோடி, திரு​வனந்​த​புரத்​தில் நடை​பெறும் அரசு நிகழ்ச்​சி​யில் பங்கேற்கிறார். அன்று இரவு திரு​வனந்​த​புரத்​தில் இருந்து திருச்​சிக்கு வரு​வ​தாக கூறப்​படு​கிறது. 27-ம் தேதி அரியலூர் மாவட்​டம் கங்கை கொண்ட சோழபுரத்​தில் நடை​பெறும் ஆடி திரு​வா​திரை விழா​வில் பிரதமர் மோடி பங்​கேற்​கிறார். தொடர்ந்​து, 28-ம் தேதி பெரம்​பலூர், தஞ்​சாவூரில் நடை​பெறும் நிகழ்ச்​சிகளி​லும் பிரதமர் மோடி பங்​கேற்க இருப்​ப​தாக​ தகவல்​வெளி​யாகி உள்​ளது. பிரதமர் வருகையை முன்னிட்டு, பாது​காப்​புக்​கான முன்​னேற்​பாடு​கள் தொடங்​கியுள்​ளன. விழா ஏற்​பாடு​களை மத்​தி​ய, மாநில அரசு அதிகாரிகள் மேற்​கொண்​டு வருகின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x