Published : 11 Jul 2025 05:30 AM
Last Updated : 11 Jul 2025 05:30 AM

தேனியில் ஆக.3-ல் ஆடு, மாடு மேய்க்கும் போராட்டம்: சீமான் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை மாவட்டம் விராதனூரில் நேற்று நடைபெற்ற `மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை' என்ற மாநாட்டுக்காக அழைத்து வரப்பட்டிருந்த மாடுகள்.

மதுரை: தேனி வனப் பகு​தி​யில் ஆக.3-ல் ஆடு, மாடு மேய்க்​கும் போராட்​டம் நடத்​தப்​படும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறி​னார். மதுரை மாவட்​டம் விராதனூரில் ‘மேய்ச்​சல் நிலம் எங்​கள் உரிமை’ என்ற பெயரில் ஆடு-​மாடு​கள் மாநாடு நேற்று நடை​பெற்​றது.

இதில் சீமான் பேசி​ய​தாவது: ஆடு, மாடு​கள் எங்​களின் செல்​வங்​கள். எங்​கள் வாழ்க்​கை, கலாச்​சா​ரத்​துடன் இணைந்து வாழும் உயி​ரினங்​கள். ஒவ்​வொரு​வர் வீட்​டிலும் உறவினர்​போல ஆடு, மாடு​களை வளர்த்து வருகிறோம். காடும், காடு சார்ந்த இடங்​களில் வாழ்ந்த ஆடு, மாடு​கள், தற்​போது அதே காட்​டுக்​குள் நுழைய தடை விதிக்​கப்​படு​கிறது. இந்த தடையை உடைக்க வேண்​டும்.

மாட்​டுக்​கறி வர்த்​தகம் ரூ.30 ஆயிரம் கோடி​யாக உயர்ந்​துள்​ளது. பால் வர்த்​தகம் மூலம் ரூ.13.5 லட்​சம் கோடி வரு​வாய் கிடைக்​கிறது. இதில் தமிழகத்​தின் பங்கு ரூ.1.38 லட்​சம் கோடி​யாகும். இந்த பால் சந்தை மதிப்பை கூட்​டு​வதற்கு பதில், ரூ.50 ஆயிரம் கோடிக்கு மது அருந்​த​வைத்​து, தாய்​மார்​களை கண்​கலங்​கச் செய்​கின்​றனர்.

இந்​தி​யா​வில் ரூ.1.7 கோடி ஹெக்​டேர் மேய்ச்​சல் நிலம் இருப்​ப​தாக​வும், தமிழகத்​தில் 12 லட்​சம் ஹெக்​டேர் மேய்ச்​சல் நிலம் இருப்​ப​தாக​வும் கூறுகின்​றனர். இந்த மேய்ச்​சல் நிலங்​களை விமான நிலை​யம், பேருந்து நிலை​யம் கட்​டு​வதற்​காக அபகரிக்​கின்​றனர். கால்​நடைகளை காட்​டுக்​குள் மேய விடு​வ​தில்​லை, சமவெளி​யிலும் மேய விடு​வ​தில்​லை.

மாடு​கள் மேய்ந்​தால் காட்​டில் ஆறு, அருவி உரு​வா​காது என்​கின்​றனர். நொய்​யல் ஆறு, வைகை ஆறு நிலை எப்​படி இருக்​கிறது. இந்த ஆறுகள் சாக்​கடைகளாக மாறி​யுள்​ளன. 32 ஆறுகள் மண் அள்​ளப்​பட்​டு, சீரழிக்​கப்​பட்​டுள்​ளன. வன விலங்​கு​களைப் பாது​காக்க மேய்ச்​சலுக்கு தடை விதிப்​ப​தாக கூறு​பவர்​கள், குவாரிக்​காக மலைகளை அழிக்​கின்​றனர்.

தேனி மாவட்​டத்​தில் காட்​டுக்​குள் மாட்டை மேய்ச்​சலுக்கு ஓட்​டிச் சென்ற விவ​சாயி சன்​னாசி வனத் துறை​யால் தாக்​கப்​பட்​டார். அதே இடத்​தில் ஆக. 3-ம் தேதி பல்​லா​யிரம்​ ​மாடு​களை ​காட்​டுக்​குள்​ மேய்​ச்​சலுக்​கு அழைத்​துச்​ சென்​று போ​ராட்​டம்​ நடத்​து​வோம்​. இவ்​​வாறு சீ​மான்​ பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x