Published : 11 Jul 2025 09:55 AM
Last Updated : 11 Jul 2025 09:55 AM

எடுத்தார் பாலாஜி... கொடுத்தார் உதயகுமார்..! - விறுவிறுக்கும் விருதுநகர் மாவட்ட அதிமுக அரசியல்

விருதுநகர் மாவட்ட அதிமுக-வில் தன்னைத் தவிர வேறு முக்கிய தலைகள் யாரும் தலைதூக்கிவிடக் கூடாது என்பதில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உஷாராக இருப்பதாக அதிமுக-வினர் அடிக்கடி சொல்வார்கள். அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் கேடிஆர்.எம்​ஜிஆரின் முரட்டு பக்​தர் என்று சொல்​லப்​பட்ட தாமரைக்​க​னி, 1991 ராஜிவ் அலை​யிலேயே ஸ்ரீவில்​லிபுத்​தூரில் சுயேச்​சை​யாக நின்று வென்​றவர்.

அதே​போல் 1996-ல், அதி​முக-வுக்கு கிடைத்த நான்கு எம்​எல்​ஏ-க்​களில் தாமரைக்​க​னி​யும் ஒரு​வர். அந்​தளவுக்கு விருதுநகர் மாவட்ட அரசி​யலில் தனக்​கென இரு இடத்தை தக்​க​வைத்​திருந்​தவர் தாமரைக்​க​னி. அப்​படிப்​பட்​ட​வ​ருக்கு 2001 தேர்​தலில் ஜெயலலிதா சீட் கொடுக்​க​வில்​லை. அவருக்​குப் பதிலாக அவரது மகன் இன்​பத்​தமி​ழனை ஸ்ரீவில்​லிபுத்​தூரில் நிறுத்​தி, சுயேச்​சை​யாக போட்​டி​யிட்ட தாமரைக்​க​னியை தோற்​கடித்​தார். இதனைத் தொடர்ந்து இன்​பத்​தமி​ழனை அமைச்​ச​ராக​வும், விருதுநகர் மாவட்​டச் செய​லா​ள​ராக​வும் ஆக்​கி​னார் ஜெயலலி​தா.

2005-ல் தாமரைக்​கனி கால​மா​னார். அப்​போது தலைவிக்​குப் பயந்து கொண்டு தந்​தை​யின் இறு​திச் சடங்​கில் கூட கலந்​து​கொள்​ளாமல் இருந்​தார் இன்​பத்​தமி​ழன். கடைசி நேரத்​தில் தலை​மை​யின் அனு​மதி கிடைத்த பிறகே மயானக்​கரைக்​குச் சென்று இறு​திச் சடங்​கில் கலந்து கொண்​டார். ஆனால், தந்​தையை​விட தலைவி தான் முக்​கி​யம் என நினைத்​துக் கொண்​டிருந்த இன்​பத்​தமி​ழனை​யும் 2006 தேர்​தலில் ஓரங்​கட்​டி​னார் ஜெயலலி​தா. இதனால், வாக்​குப் பதிவுக்கு முன்​ன​தாக அவரை அழகிரி தரப்பு திமுக-வுக்கு தள்​ளிக்​கொண்டு போனது.

ஆனால், தாமரைக்​க​னி​யின் மகனால் திமுக-​வில் தாக்​குப்​பிடிக்க முடிய​வில்​லை. அதனால் வெகு சீக்​கிரத்​திலேயே மீண்​டும் அதி​முக-வுக்கு யுடர்ன் அடித்​தார் இன்​பத்​தமி​ழன். இதனிடையே, தொகுதி சீரமைப்​பில் ஸ்ரீவில்​லிபுத்​தூர் தனித் தொகு​தி​யாக மாறிப் போன​தால் 2011-ல் இன்​பத்​தமி​ழனுக்கு வாய்ப்​புக் கிடைக்​காமல் போனது. அந்​தத் தேர்​தலில் சிவ​காசி​யில் வெற்​றி​பெற்ற கே.டி.​ராஜேந்​திர பாலாஜி அமைச்​சர், மாவட்​டச் செய​லா​ளர் என அடுத்​தடுத்து பதவிக்கு வந்​தார்.

ராஜேந்​திர பாலாஜி மாவட்​டச் செய​லா​ளர் ஆன பிறகு, முன்​னாள் அமைச்​சர்​களான ஆர்​.பி.உதயகு​மார், வைகைச்​செல்​வன் உள்​ளிட்​ட​வர்​களுக்கு எதி​ராக தந்​திர​மாக காய்​நகர்த்தி அவர்​களை ஓரங்​கட்​டி​னார். லேட்​டஸ்​டாக முன்​னாள் அமைச்​சர் மாஃபா பாண்​டிய​ராஜனுக்கு எதி​ராக​வும் கர்​ஜிக்க ஆரம்​பித்​திருக்​கி​றார். இது ஒரு​புறமிருக்க, ஜெயலலிதா மறைவுக்​குப் பிறகு டிடிவி தினகரன் நிழலில் தஞ்​சமடைந்த இன்​பத்​தமி​ழன் அமமுக-வுக்கு மாவட்​டச் செய​லா​ளர் ஆனார். ஆனால், அங்​கே​யும் காலம் தள்​ள​முடி​யாமல் மீண்​டும் அதி​முக-வுக்கே திரும்​பிய​வர், ஸ்ரீவில்​லிபுத்​தூர் நகரச் செய​லா​ள​ராக நியமிக்​கப்​பட்​டார்.

இந்த நிலை​யில், இப்​போது அவரை நகரச்​செய​லா​ளர் பதவியி​லிருந்து நைஸாக கழட்​டி​விட்​டிருக்​கி​றார் ராஜேந்​திர பாலாஜி. இன்​பத்​தமி​ழனுக்கு எதி​ராக இப்​படியொரு மூவ் நடப்​பது தெரிந்​ததும், ஜெயலலிதா பேரவை மாநிலச் செய​லா​ள​ராக இருக்​கும் ஆர்​.பி.உதயகு​மார் எடப்​பாடி​யா​ரிடம் பேசி இன்​பத்​தமி​ழனை பேர​வை​யின் மாநில இணைச் செய​லா​ள​ராக நியமிக்க வைத்​திருக்​கி​றார்.

ஆக, எதிரிக்கு எதிரி நண்​பன் என்ற முறை​யில், லோக்​கல் அரசி​யலில் ராஜேந்​திர பாலாஜி​யால் ஓரங்​கட்​டப்​பட்ட இன்​பத்​தமி​ழனுக்கு மாநில அளவில் பொறுப்​புக் கொடுத்து அரவணைத்​திருக்​கி​றார் உதயகு​மார். இதற்​காக இன்​பத்​தமி​ழனுக்கு வாழ்த்​துத் தெரி​வித்து அவரது ஆதர​வாளர்​கள் வைத்​திருக்​கும் ஃபிளெக்​ஸ்​களில் எல்​லாம் ராஜேந்​திர பாலாஜி​யின் படம் மிஸ்​ஸாகி அதற்​குப் பதிலாக ஆர்​.பி.உதயகு​மார் அட்​ட​காச​மாக சிரித்​துக் கொண்​டிருக்​கி​றார்.

இன்​பத்​தமி​ழன்

இதுகுறித்து நம்​மிடம் பேசிய இன்​பத்​தமி​ழன் ஆதர​வாளர்​கள், “இன்​பத்​தமி​ழன் அமைச்​ச​ராக​வும், மாவட்​டச் செய​லா​ள​ராக​வும் இருந்​த​போது திருத்​தங்​கல் நகராட்சி துணை தலை​வ​ராக இருந்​தவர் ராஜேந்​திர பாலாஜி. ஆனால், சூழ்​நிலை​கள் மாறி அவர் அமைச்​சர் ஆனதும் ஆர்​.பி.உதயகு​மார், இன்​பத்​தமி​ழன், வைகைச்​செல்​வன் உள்​ளிட்ட சீனியர்​களை வரிசை​யாக ஓரங்​கட்​டி​னார்.

2011-க்​குப் பிறகு விருதுநகர் மாவட்​டத்​தில் அதி​முக-​வின் செல்​வாக்கு சரிந்து வரு​வதற்கு இது​வும் ஒரு முக்​கிய காரணம். 2024 மக்​கள​வைத் தேர்​தல் தோல்வி குறித்து இபிஎஸ் நடத்​திய கருத்​துக் கேட்பு கூட்​டத்​தில், ‘மாவட்​டச் செய​லா​ளர் ராஜேந்​திர பாலாஜி தேர்​தல் செல​வுக்கு பணம் தரவில்​லை’ என அனைத்து நிர்​வாகி​களை​யும் வைத்​துக் கொண்டு உண்​மை​யைச் சொன்​னார் இன்​பத்​தமி​ழன்.

இதை ராஜேந்​திர பாலாஜி​யால் ஜீரணித்​துக்​கொள்ள முடிய​வில்​லை. அப்​போ​திருந்​தே, இன்​பத்​தமி​ழனை நகரச் செய​லா​ளர் பதவி​யில் இருந்து தூக்​கு​வதற்கு சமயம் பார்த்​துக் கொண்​டிருந்த பாலாஜி, இப்​போது அவரை மட்​டுமில்​லாது ஸ்ரீவில்​லிபுத்​தூர் தொகு​தி​யில் அவரது ஆதர​வாளர்​கள் சுமார் 250 பேரின் பொறுப்​பு​களை​யும் பறித்​துள்​ளார். இதற்​கான பலனை தேர்​தலில் அவர் அறு​வடை செய்​வார்” என்​ற​னர்.

இதுகுறித்து இன்​பத்​தமி​ழனிடம் கேட்​டதற்​கு, “ஒருங்​கிணைந்த விருதுநகர் மாவட்ட அதி​முக செய​லா​ள​ராக​வும், அமைச்​ச​ராக​வும் பணி​யாற்ற ஜெயலலிதா எனக்கு வாய்ப்​பளித்​தார். இப்​போது நகரச் செய​லா​ளர் பதவிக்கு பதிலாக ஜெ பேரவை மாநில இணைச் செய​லா​ள​ராக இபிஎஸ் என்னை நியமித்​துள்​ளார். இதன் மூல​மாக விருதுநகர் மாவட்​டம் மட்​டுமல்​லாது தமி​ழ​கம் முழு​வதும் பொதுச் செய​லா​ள​ருடன் சுற்​றுப்​பயணம் செய்து அதி​முக வெற்​றிக்​குப் பாடு​படு​வேன்” என்​றார்.

ஆர்​.பி.உதயகு​மார், வைகைச்​செல்​வன், மாஃபா பாண்​டிய​ராஜன் இவர்​களோடு தடாலடி அரசி​யலுக்கு பேர் போன இன்​பத்​தமி​ழனை​யும் சேர்த்​து​விட்டு தனது அரசி​யல் எதிரி​கள் வட்​டாரத்தை மேலும் விரி​வுபடுத்தி இருக்​கி​றார் ராஜேந்​திர பாலாஜி. என்ன நடக்​கிறதென்று பார்​க்​கலாம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x